Thirumozhi 6-1

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

முதல் திருமொழி

 

வண்டுணு நறுமலரிண்டை கொண்டு

பண்டை நம் வினை கெட என்று * அடி மேல்

தொண்டரும் அமரரும் பணிய நின்று, அங்கு

அண்டமொடு அகலிடம் அளந்தவனே !

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.1      திருவிண்ணகர்

அண்ணல் செய்து அலைகடல் கடைந்து, அதனுள்

கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே !

விண்ணவ ரமுதுண அமுதில் வரும்

பெண்ணமுதுண்ட எம்பெருமானே !

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.2      திருவிண்ணகர்

குழல்நிறவண்ண ! நின் கூறு கொண்ட

தழல்நிறவண்ணன் நண்ணார் நகரம்

விழ * நனிமலை சிலை வளைவு செய்து, அங்கு

அழல்நிற அம்பது வானவனே !

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.3      திருவிண்ணகர்

நிலவொடு வெயில் நிலவிரு சுடரும்

உலகமும் உயிர்களுமுண்டு ஒருகால் *

கலைதரு குழவியின் உருவினையாய்

அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே !

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.4      திருவிண்ணகர்

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்

சீர்கெழும் இவ்வுலகேழு மெல்லாம் *

ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்று, அங்கு

ஓரெழுத்து ஓருருவானவனே !

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.5      திருவிண்ணகர்

கார்கெழு கடல்களும் மலைகளுமாய்

ஏர்கெழும் உலகமுமாகி * முத

லார்களும் அறிவரு நிலையினையாய்ச்

சீர்கெழு நான்மறை யானவனே ! *

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.6      திருவிண்ணகர்

உருக்குறு நறுநெய் கொண்டு, ஆரழலில்

இருக்குறும் அந்தணர் சந்தியின் வாய் *

பெருக்கமொடு அமரர்களமர நல்கும்

இருக்கினில், இன்னிசை யானவனே ! *

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !             6.1.7      திருவிண்ணகர்

காதல் செய்து இளையவர் கலவி தரும்

வேதனை வினையது வெருவுதலாம் *

ஆதலின் உனதடி யணுகுவன் நான்

போதலர் நெடுமுடிப் புண்ணியனே ! *

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !            6.1.8      திருவிண்ணகர்

சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக்

காதல் செய்யாது உன கழலடைந்தேன் *

ஓதல் செய் நான் மறையாகி, உம்பர்

ஆதல் செய் மூவுருவானவனே ! *

ஆண்டாய் ! உனைக் காண்பதோரருள் எனக்கருளுதியேல்

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே !         6.1.9      திருவிண்ணகர்

பூமரு பொழிலணி, விண்ணகர் மேல் *

காமரு சீர்க் கலிகன்றி சொன்ன *

பாமரு தமிழிவை, பாட வல்லார் *

வாமன னடியிணை, மருவுவரே.   6.1.10    திருவிண்ணகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.