Thirumozhi 6-3

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

மூன்றாம் திருமொழி

துறப்பேனல்லேன், இன்பம் துறவாது * நின்னுருவம்

மறப்பேனல்லேன், என்றும் மறவாது * யான் உலகில்

பிறப்பேனாக எண்ணேன், பிறவாமை பெற்றது * நின்

திறத்தேனா தன்மையால், திருவிண்ணகரானே !         6.3.1      திருவிண்ணகர்

துறந்தேன் ஆர்வச் செற்றச், சுற்றம் துறந்தமையால் *

சிறந்தேன் நின்னடிக்கே அடிமை, திருமாலே ! *

அறந்தானாய்த் திரிவாய் ! உன்னை என் மனத்தகத்தே *

திறம்பாமல் கொண்டேன், திருவிண்ணகரானே !            6.3.2      திருவிண்ணகர்

மானேய் நோக்கு நல்லார், மதிபோல் முகத்து உலவும் *

ஊனேய் கண்வாளிக் குடைந் தோட்டந் துன்னடைந்தேன் *

கோனே ! குறுங்குடியுள் குழகா ! திருநறையூர்த்

தேனே ! * வருபுனல் சூழ், திருவிண்ணகரானே !       6.3.3      திருவிண்ணகர்,

திருநறையூர்,

திருக்குறுங்குடி

சாந்தேந்து மென்முலையார், தடந்தோள் புணரின்ப வெள்ளத்து

ஆழ்ந்தேன் * அருநரகத் தழுந்தும், பயன் படைத்தேன் *

போந்தேன் புண்ணியனே ! உன்னை யெய்தி என் தீவினைகள்

தீர்ந்தேன் * நின்னடைந்தேன், திருவிண்ணகரானே !  6.3.4      திருவிண்ணகர்

மற்றோர் தெய்வம் எண்ணேனுன்னை என் மனத்து வைத்துப்

பெற்றேன் * பெற்றதுவும், பிறவாமை எம்பெருமான் ! *

வற்றா நீள் கடல் சூழ் இலங்கை, இராவணனைச்

செற்றாய் ! * கொற்றவனே! திருவிண்ணகரானே !     6.3.5      திருவிண்ணகர்

மையொண் கருங்கடலும், நிலனும் மணிவரையும் *

செய்ய சுடரிரண்டும், இவையாய நின்னை * நெஞ்சில்

உய்யும் வகை உணர்ந்தே னுண்மையால் இனி * யாதும் மற்றோர்

தெய்வம் பிறிதறியேன், திருவிண்ணகரானே !  6.3.6      திருவிண்ணகர்

வேறே கூறுவதுண்டு, அடியேன் விரித்துரைக்கு

மாறே * நீ பணியாது அடை நின் திருமனத்துக் *

கூறேன் நெஞ்சு தன்னால், குணங் கொண்டு * மற்றோர் தெய்வம்

தேறேன் உன்னை யல்லால், திருவிண்ணகரானே !  6.3.7      திருவிண்ணகர்

முளிந்தீந்த வேங்கடத்து, மூரிப் பெருங் களிற்றால் *

விளிந்தீந்த மாமரம் போல், வீழ்ந்தாரை நினையாதே *

அளிந்தோர்ந்த சிந்தை, நின்பாலடியேற்கு * வானுலகம்

தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே !     6.3.8      திருவிண்ணகர்

சொல்லாய் திருமார்வா ! உனக்காகித் தொண்டு பட்ட

நல்லேனை * வினைகள் நலியாமை, நம்பு நம்பீ *

மல்லா ! குடமாடீ ! மதுசூதனனே ! * உலகில்

செல்லா நல்லிசையாய் ! திருவிண்ணகரானே !    6.3.9      திருவிண்ணகர்

தாரார் மலர்க்கமலத், தடம் சூழ்ந்த தண்புறவில் *

சீரார் நெடுமறுகில், திருவிண்ணகரானைக் *

காரார் புயல் தடக்கைக், கலியனொலி மாலை *

ஆரார் இவை வல்லார், அவர்க்கு அல்லல் நில்லாவே.      6.3.10    திருவிண்ணகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.