Thirumozhi 6-7

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

ஏழாம் திருமொழி

ஆளும்பணியும் அடியேனைக் கொண்டான் *விண்ட நிசாசரரை

தோளும் தலையும் துணிவெய்தச் சுடுவெஞ்சிலை வாய்ச்சரம்துரந்தான்*

வேளும் சேயும் அனையாரும் வேற்கணாரும் பயில் வீதி *

நாளும் விழவினொலி யோவா நறையூர் நின்ற நம்பியே.              6.7.1      திருநறையூர்

முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னருடல் துணியத் *

தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான், வார்புறவில் *

பனிசேர் முல்லை பல்லரும்பப், பானல் ஒரு பால் கண் காட்ட *

நனிசேர் கமலம் முகங் காட்டும் நறையூர் நின்ற நம்பியே.            6.7.2      திருநறையூர்

தெள்ளார் கடல்வாய் விடவாயச் சினவாளரவில் துயிலமர்ந்து *

துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான், இரந்தான் மாவலி மண் *

புள்ளார் புறவில் பூங்காவி புலன் கொள் மாதர் கண்காட்ட *

நள்ளார் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே.          6.7.3      திருநறையூர்

ஒளியா வெண்ணெய் உண்டானென்று

உரலோடு ஆய்ச்சி ஒண்கயிற்றால் *

விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி

அழுதான், மென் மலர் மேல் *

களியா வண்டு கள்ளுண்ணக்

காமர் தென்றல் அலர் தூற்ற *

நளிர் வாய் முல்லை முறுவலிக்கும்

நறையூர் நின்ற நம்பியே.     6.7.4      திருநறையூர்

வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்துக்*

கல்லார் திரள்தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான்காளியன்மேல்*

சொல்லார் சுருதி முறை ஓதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் *

நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே.        6.7.5      திருநறையூர்,

வடமதுரை

வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான்

வெள்கியோட*விறல்வாணன் வியன்தோள்வனத்தைத் துணித்துகந்தான்*

பள்ளி கமலத்திடை பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி *

நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே.     6.7.6      திருநறையூர்

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவிக் *

குடையா வரை யொன்றெடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூராழிப்

படையான் * வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கமாறு இசையேழ் *

நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே.        6.7.7      திருநறையூர்

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் * பாரதத்து

கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் *

செந்தாமரை மேலயனோடு சிவனும் அனைய பெருமையோர் *

நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே.       6.7.8      திருநறையூர்

ஆறும்பிறையும் அரவமும் அடம்பும் சடைமேலணிந்து* உடலம்

நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறையிரப்ப *

மாறொன்றில்லா வாசநீர் வரை மார்பகலத் தளித்துகந்தான் *

நாறும் பொழில் சூழ்ந்தழகாய நறையூர் நின்ற நம்பியே.     6.7.9      திருநறையூர்

நன்மையுடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியைக் *

கன்னி மதிள்சூழ் வயல் மங்கைக் கலியனொலி செய் தமிழ் மாலை *

பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் *

மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே.           6.7.10                திருநறையூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.