Thiruvoymozhi 6-1

திருவாய்மொழி

ஆறாம் பத்து

முதல் திருவாய்மொழி

வைகல் பூங்கழிவாய், வந்து மேயும் குருகினங்காள் ! *

செய் கொள் செந்நெலுயர், திருவண்வண்டூருறையும் *

கைகொள் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*

கைகள் கூப்பிச் சொல்லீர், வினையாட்டியேன் காதன்மையே.     6.1.1                திருவண்வண்டூர்

காதல் மென் பெடையோடு, உடன் மேயும் கருநாராய் ! *

வேத வேள்வி யொலி முழங்கும், தண் திருவண்வண்டூர் *

நாதன் ஞால மெல்லா முண்ட, நம்பெருமானைக் கண்டு *

பாதம் கை தொழுது பணியீர், அடியேன் திறமே.     6.1.2      திருவண்வண்டூர்

திறங்களாகி எங்கும், செய்களூடுழல் புள்ளினங்காள் ! *

சிறந்த செல்வம் மல்கு, திருவண்வண்டூருறையும் *

கறங்கு சக்கரக்கைக், கனி வாய்ப் பெருமானைக் கண்டு *

இறங்கி நீர் தொழுது பணியீர், அடியேனிடரே.    6.1.3      திருவண்வண்டூர்

இடரில் போகம் மூழ்கி, இணைந்தாடும் மட வன்னங்காள் ! *

விடலில் வேத வொலி முழங்கும், தண் திருவண்வண்டூர் *

கடலின் மேனிப் பிரான் கண்ணனை, நெடுமாலைக் கண்டு *

உடலம் நைந்து ஒருத்தி, உருகுமென்று உணர்த்துமினே.    6.1.4      திருவண்வண்டூர்

உணர்த்த லூடலுணர்ந்து, உடன் மேயும் மடவன்னங்காள் ! *

திணர்த்த வண்டல்கள் மேல், சங்கு சேரும் திருவண்வண்டூர் *

புணர்த்த பூந்தண் துழாய் முடி, நம்பெருமானைக் கண்டு *

புணர்த்த கையினராய், அடியேனுக்கும் போற்றுமினே.       6.1.5      திருவண்வண்டூர்

போற்றி யான் இரந்தேன், புன்னை மேலுறை பூங்குயில்காள் ! *

சேற்றில் வாளை துள்ளும், திருவண்வண்டூருறையும் *

ஆற்ற லாழியங்கை, அமரர் பெருமானைக் கண்டு *

மாற்றம் கொண்டருளீர், மையல் தீர்வதொரு வண்ணமே.   6.1.6      திருவண்வண்டூர்

ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை ஒண் கிளியே ! *

செருவொண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர் *

கருவண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் *

செருவொண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.       6.1.7                திருவண்வண்டூர்

திருந்தக் கண்டு எனக்கு, ஒன்றுரையாய் ஒண்சிறு பூவாய் ! *

செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ், தண்திருவண்வண்டூர் *

பெருந்தண் தாமரைக் கண், பெருநீள்முடி நால் தடந்தோள் *

கருந்திண் மாமுகில் போல், திருமேனி யடிகளையே.         6.1.8      திருவண்வண்டூர்

அடிகள் கை தொழுது, அலர் மேலசையும் அன்னங்காள் ! *

விடிவை சங்கொலிக்கும், திருவண்வண்டூருறையும் *

கடிய மாயன் தன்னைக், கண்ணனை நெடுமாலைக் கண்டு *

கொடிய வல்வினையேன், திறம் கூறுமின் வேறு கொண்டே.        6.1.9                திருவண்வண்டூர்

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன், வெறிவண்டினங்காள்! *

தேறு நீர்ப் பம்பை வடபாலைத், திருவண்வண்டூர் ! *

மாறில் போரரக்கன், மதிள் நீறெழச் செற்றுகந்த *

ஏறு சேவகனார்க்கு, என்னையும் உளள் என்மின்களே.      6.1.10    திருவண்வண்டூர்

மின்கொள் சேர் புரிநூல் குறளாய், அகல் ஞாலம் கொண்ட *

வன் கள்வனடி மேல், குருகூர்ச் சடகோபன் சொன்ன *

பண் கொளாயிரத்துள், இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு *

இன்கொள் பாடல் வல்லார், மதனர் மின்னிடையவர்க்கே.          6.1.11     திருவண்வண்டூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.