Thiruvoymozhi 6-10

திருவாய்மொழி

ஆறாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

உலகமுண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே ! *

நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி !, நெடியாய் ! அடியேனாருயிரே ! *

திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! *

குலதொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.        6.10.1    திருவேங்கடம் திருப்பதி

கூறாய் நீறாய் நிலனாகிக், கொடு வல்லசுரர் குலமெல்லாம் *

சீறா எறியும் திருநேமி வலவா ! தெய்வக் கோமானே ! *

சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே ! *

ஆறா வன்பிலடியேன், உன்னடி சேர் வண்ணம் அருளாயே.           6.10.2    திருவேங்கடம் திருப்பதி

வண்ணமருள் கொளணி மேக வண்ணா ! மாய வம்மானே ! *

எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே ! இமையோ ரதிபதியே ! *

தெண்ணலருவி மணிபொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே ! *

அண்ணலே ! உன்னடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே.      6.10.3    திருவேங்கடம் திருப்பதி

ஆவா ! என்னாது உலகத்தை யலைக்கும் அசுரர் வாணாள் மேல் *

தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா ! திருமாமகள் கேள்வா !

தேவா !* சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! *

பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே.      6.10.4    திருவேங்கடம் திருப்பதி

புணரா நின்ற மரமேழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ ! *

புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ ! *

திணரார் மேகமெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே ! *

திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது, அடியே னெந்நாளே?      6.10.5    திருவேங்கடம் திருப்பதி

எந்நாளே ? நாம்மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கென்று *

எந்நாளும் நின்று இமையோர்களேத்தி இறைஞ்சி இனமினமாய் *

மெய்ந்நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே ! *

மெய்ந்நானெய்தி எந்நாள் உன்னடிக்கண் அடியேன் மேவுவதே?    6.10.6    திருவேங்கடம் திருப்பதி

அடியேன் மேவி யமர்கின்ற அமுதே ! இமையோ ரதிபதியே ! *

கொடியாவடு புள்ளுடையானே ! கோலக் கனிவாய்ப் பெருமானே ! *

செடியார் வினைகள் தீர்மருந்தே ! திருவேங்கடத்தெம்பெருமானே ! *

நொடியார் பொழுதும் உனபாதம் காண, நோலா தாற்றேனே.          6.10.7    திருவேங்கடம் திருப்பதி

நோலாதாற்றேன் உனபாதம் காணவென்று நுண்ணுணர்வின் *

நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் *

சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே ! *

மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே.         6.10.8    திருவேங்கடம் திருப்பதி

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே ! *

செந்தாமரைக் கண் செங்கனிவாய் நால் தோளமுதே ! எனதுயிரே ! *

சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே ! *

அந்தோ ! அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே.      6.10.9    திருவேங்கடம் திருப்பதி

அகலகில்லேனிறையு மென்றலர்மேல் மங்கையுறை மார்பா ! *

நிகரில் புகழாய் ! உலகம் மூன்றுடையாய் ! என்னை யாள்வானே ! *

நிகரிலமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! *

புகலொன்றில்லா அடியேன், உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.     6.10.10       திருவேங்கடம் திருப்பதி

அடிக்கீழமர்ந்து புகுந்து

அடியீர் ! வாழ்மினென்றென்றருள் கொடுக்கும் *

படிக்கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன் *

முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும் *

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து, பெரிய வானுள் நிலாவுவரே.    6.10.11  திருவேங்கடம் திருப்பதி

*********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.