Thiruvoymozhi 3-6

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகேழும் உண்ட அவன் கண்டீர் *

வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்ச்*

செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டிவை படைத்தான் *

பின்னும்மொய்கொள் சோதியோடாயினான் ஒருமூவராகியமூர்த்தியே.        3.6.1

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச் *

சாவ முள்ளன நீக்குவானைத் தடங்கடல் கிடந்தான் தன்னைத் *

தேவ தேவனைத், தென்னிலங்கை யெரியெழச் செற்ற வில்லியைப் *

பாவ நாசனைப், பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ.    3.6.2

பரவி வானவரேத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக் *

குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *

அரவமேறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை *

இரவும் நன்பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.    3.6.3                திருப்பாற்கடல்

வைம்மின்நும்மனத்தென்று யானுரைக்கின்ற மாயவன்சீர்மையை *

எம்மனோர்கள் உரைப்பதென்? அது நிற்க * நாள்தொறும்

வானவர் தம்மை யாளுமவனும், நான்முகனும் சடைமுடியண்ணலும் *

செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்தேத்தித் திரிவரே.    3.6.4

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் *

எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்க் *

கரிய மேனியன் செய்யதாமரைக்கண்ணன் கண்ணன் விண்ணோரிறை *

சுரியும் பல் கருங்குஞ்சி எங்கள் சுடர்முடி யண்ணல் தோற்றமே.          3.6.5

தோற்றக்கேடவையில்லவன் உடையான்அவன்ஒருமூர்த்தியாய்ச் *

சீற்றத்தோடருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால் *

நாற்றத் தோற்றச் சுவையொலி உறலாகி நின்ற * எம் வானவ

ரேற்றையே யன்றி, மற்றொருவரை யானிலேன் எழுமைக்குமே.              3.6.6

எழுமைக்கும் எனதாவிக்கு இன்னமுதத்தினை * எனதாருயிர்

கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக்கூத்தனை *

விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனிய(யி)னைத் *

தொழுமின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே.    3.6.7

துயரமே தரு துன்ப வின்ப வினைகளாய் அவை யல்லனாய் *

உயர நின்றதோர் சோதியாய் உலகேழும் உண்டுமிழ்ந்தான் தன்னை *

அயர வாங்கு நமன் தமர்க்கு அருநஞ்சினை, அச்சுதன் தன்னைத் *

தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.       3.6.8

தஞ்சமாகிய தந்தை தாயொடு தானுமாய், அவையல்லனாய் *

எஞ்சலில் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளுமாதியை *

அஞ்சி நீருலகத்துள்ளீர்கள் ! அவனிவனென்று கூழேன்மின் *

நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே.    3.6.9

கடல்வண்ணன்கண்ணன் விண்ணவர்கருமாணிக்கம்எனதாருயிர் *

படவரவினணைக் கிடந்த பரஞ்சுடர் * பண்டு நூற்றுவர்

அடவரும் படை மங்க ஐவர்கட்காகி வெஞ்சமத்து * அன்று தேர்

கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்களே?       3.6.10

கண்கள் காண்டற் கரியனாய்க்

கருத்துக்கு நன்று மெளியனாய் *

மண்கொள் ஞாலத்து உயிர்க்கெல்லாம்

அருள் செய்யும் வானவரீசனைப் *

பண் கொள் சோலை வழுதி நாடன்

குருகைக் கோன் சடகோபன் சொல் *

பண் கொளாயிரத்து இப்பத்தால்

பத்தராகக் கூடும் பயிலுமினே.    3.6.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.