Thirumozhi 10-10
பெரிய திருமொழி பத்தாம் பத்து பத்தாம் திருமொழி திருத்தாய் செம்போத்தே ! * திருமாமகள் தன் கணவன் * மருத்தார், தொல்புகழ் மாதவனை வரத் * திருத்தாய் செம்போத்தே ! 10.10.1 கரையாய் காக்கைப் பிள்ளாய் !* கருமாமுகில்போல் நிறத்தன் * உரையார் தொல்புகழுத்தமனைவரக்* கரையாய் காக்கைப்பிள்ளாய் ! 10.10.2 கூவாய் பூங்குயிலே ! * குளிர்மாரி தடுத்துகந்த * மாவாய் கீண்ட மணிவண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே ! 10.10.3 கொட்டாய், பல்லிக்குட்டி […]
Thirumozhi 10-9
பெரிய திருமொழி பத்தாம் பத்து ஒன்பதாம் திருமொழி புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள * இலங்கை ஒள்ளெரி மண்டியுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ ? * கள்ளவிழ் கோதை காதலும் எங்கள், காரிகை மாதர் கருத்தும் * பிள்ளை தன்கையில் கிண்ணமேயொக்கப் பேசுவது எந்தை பிரானே! 10.9.1 மன்றில் மலிந்து கூத்து உவந்தாடி மால்விடை யேழுமடர்த்து * ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ ? அறியேன் நான் * நின்ற […]
Thirumozhi 10-8
பெரிய திருமொழி பத்தாம் பத்து எட்டாம் திருமொழி காதில் கடிப்பிட்டுக், கலிங்க முடுத்துத் * தாது நல்ல தண்ணந் துழாய், கொடணிந்து * போது மறுத்துப், புறமே வந்து நின்றீர் * ஏதுக்கு இதுவென் ?, இதுவென் ? இதுவென்னோ ? 10.8.1 துவராடை யுடுத்து, ஒரு செண்டு சிலுப்பிக் * கவராக முடித்துக், கலிக்கச்சுக் கட்டிக் * சுவரார் கதவின் புறமே வந்து, நின்றீர் * இவரார் ? இதுவென் ?, இதுவென் ? […]
Thirumozhi 10-7
பெரிய திருமொழி பத்தாம் பத்து ஏழாம் திருமொழி மானமுடைத்து உங்களாயர் குலம் அதனால், பிறர் மக்கள் தம்மை * ஊனமுடையன செய்யப் பெறாயென்று இரப்பன், உரப்ப கில்லேன் * நானுமுரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள்! நானென் செய்கேன் ? * தானும் ஓர் கன்னியும் கீழையகத்துத் தயிர் கடைகின்றான் போலும். 10.7.1 காலை யெழுந்து கடைந்த இம்மோர் விற்கப் போகின்றேன், கண்டே போனேன் * மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்று வந்தாரும் […]
Thirumozhi 10-6
பெரிய திருமொழி பத்தாம் பத்து ஆறாம் திருமொழி எங்கானும் ஈதொப்பதோர் மாயமுண்டே ? நரநாரணனாய் * உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும் * பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப், பொன்மிடறு அத்தனை போது அங்காந்தவன் காண்மின் * இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெயுண்டு ஆப்புண்டிருந்தவனே. 10.6.1 குன்றொன்று மத்தா அரவமளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு * ஒருகால் நின்று உண்டை கொண்டோட்டி […]
Thirumozhi 10-5
பெரிய திருமொழி பத்தாம் பத்து ஐந்தாம் திருமொழி பூங்கோதை யாய்ச்சி, கடை வெண்ணெய் புக்குண்ண * ஆங்கவள் ஆர்த்துப் புடைக்கப், புடையுண்டு * ஏங்கியிருந்து, சிணுங்கி விளையாடும் * ஓங்கோத வண்ணனே ! சப்பாணி ஒளிமணி வண்ணனே ! சப்பாணி. 10.5.1 தாயர் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டு * ஏய் எம்பிராக்கள் * இரு நிலத்து எங்கள் தம் ஆயரழக ! * அடிகள் அரவிந்த வாயவனே ! கொட்டாய் சப்பாணி […]
Thirumozhi 10-4
பெரிய திருமொழி பத்தாம் பத்து நான்காம் திருமொழி சந்த மலர்க் குழல் தாழத், தானுகந்தோடித் தனியே வந்து * என் முலைத்தடந் தன்னை வாங்கி, நின் வாயில் மடுத்து * நந்தன் பெறப் பெற்ற நம்பீ ! நானுகந்துண்ணு மமுதே * எந்தை பெருமானே ! உண்ணாய், என்னம்மம் சேமமுண்ணாயே. 10.4.1 வங்கமறி கடல் வண்ணா ! மாமுகிலே யொக்கும் நம்பீ ! * செங்கண் நெடிய திருவே! செங்கமலம் புரை வாயா ! […]
Thirumozhi 10-3
பெரிய திருமொழி பத்தாம் பத்து மூன்றாம் திருமொழி ஏத்துகின்றோம் நாத்தழும்ப, இராமன் திருநாமம் * சோத்த நம்பி சுக்கிரீவா ! உம்மைத் தொழுகின்றோம் * வார்த்தை பேசீர், எம்மை உங்கள் வானரம் கொல்லாமே * கூத்தர் போல ஆடுகின்றோம், குழமணி தூரமே. 10.3.1 எம்பிரானே ! என்னை யாள்வாய் ! என்றென்று அலற்றாதே * அம்பின் வாய்ப் பட்டாற்ற கில்லாது, இந்திரசித் தழிந்தான் * நம்பி அனுமா ! சுக்கிரீவா ! அங்கதனே […]
Thirumozhi 10-2
பெரிய திருமொழி பத்தாம் பத்து இரண்டாம் திருமொழி இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை இம்மையே எமக்கெய்திற்றுக் காணீர் * பரக்க யாமின்றுரைத்து என் ? இராவணன் பட்டனன், இனி யாவர்க்கு உரைக்கோம் ? * குரக்கு நாயகர்காள் ! இளங்கோவே ! கோல வல்விலி ராமபிரானே ! * அரக்கராடழைப்பாரில்லை, நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ. 10.2.1 பத்து நீள்முடியும் அவற்றிரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் * சித்தம் மங்கையர் பால் வைத்துக் […]
Thirumozhi 10-1
பெரிய திருமொழி பத்தாம் பத்து முதல் திருமொழி ஒரு நல் சுற்றம், எனக்குயிர் ஒண் பொருள் * வருநல் தொல்கதி, ஆகிய மைந்தனை * நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய் * கருநெல் சூழ், கண்ணமங்கையுள் காண்டுமே. 10.1.1 திருக்கண்ணமங்கை, திருநீர்மலை பொன்னை மாமணியை, அணியார்ந்ததோர் மின்னை * வேங்கடத்து உச்சியில் கண்டு போய் * என்னை யாளுடை ஈசனை, எம்பிரான் தன்னை * யாம் சென்று காண்டும், தண்காவிலே. 10.1.2 […]