Thirumozhi 10-4

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

நான்காம் திருமொழி

சந்த மலர்க் குழல் தாழத், தானுகந்தோடித் தனியே

வந்து * என் முலைத்தடந் தன்னை வாங்கி, நின் வாயில் மடுத்து *

நந்தன் பெறப் பெற்ற நம்பீ ! நானுகந்துண்ணு மமுதே *

எந்தை பெருமானே ! உண்ணாய், என்னம்மம் சேமமுண்ணாயே.       10.4.1

வங்கமறி கடல் வண்ணா ! மாமுகிலே யொக்கும் நம்பீ ! *

செங்கண் நெடிய திருவே! செங்கமலம் புரை வாயா ! *

கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும், காணாதிருந்தேன் *

எங்கிருந்து ஆயர்களோடும், என் விளையாடுகின்றாயே ?     10.4.2

திருவிற் பொலிந்த எழிலார் ஆயர்தம் பிள்ளைகளோடு *

தெருவில் திளைக்கின்ற நம்பீ ! செய்கின்ற தீமைகள் கண்டிட்டு *

உருகி என் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *

மருவிக் குடங்காலிருந்து வாய் முலையுண்ண நீ வாராய்.        10.4.3

மக்கள் பெறுதவம் போலும், வையத்து வாழும் மடவார் *

மக்கள் பிறர் கண்ணுக் கொக்கும் முதல்வா ! மதக்களிறன்னாய் *

செக்கரிளம்பிறை தன்னை வாங்கி, நின் கையில் தருவன் *

ஒக்கலை மேலிருந்து, அம்மமுகந்து இனிதுண்ண நீ வாராய்.       10.4.4

மைத்த கருங்குஞ்சி மைந்தா ! மாமருதூடு நடந்தாய் ! *

வித்தகனே ! விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா ! *

இத்தனை போதன்றி என்தன் கொங்கை சுரந்திருக்க கில்லா *

உத்தமனே ! அம்மமுண்ணா யுலகளந்தாய் ! அம்மமுண்ணாய்.  10.4.5

பிள்ளைகள் செய்வன செய்யாய், பேசின் பெரிதும் வலியை *

கள்ளம் மனத்தி லுடையை, காணவே தீமைகள் செய்தி *

உள்ள முருகி என் கொங்கை, ஓட்டந்து பாய்ந்திடுகின்ற *

பள்ளிக் குறிப்புச் செய்யாதே, பாலமுதுண்ண நீ வாராய்.  10.4.6

தன்மகனாக வன்பேய்ச்சி, தான் முலையுண்ணக் கொடுக்க *

வன் மகனாய் அவளாவி வாங்கி, முலையுண்ட நம்பீ ! *

நன் மகளாய் மகளோடு, நானில மங்கை மணாளா ! *

என் மகனே ! அம்ம முண்ணாய், என்னம்மம் சேம முண்ணாயே.            10.4.7

உந்தமடிகள் முனிவர், உன்னை நான் என் கையில் கோலால் *

நொந்திட மோதவும் கில்லேன், நுங்கள் தமாநிரை எல்லாம் *

வந்து புகுதரும் போது, வானிடைத் தெய்வங்கள் காண *

அந்தியம் போதங்கு நில்லேல், ஆழியங்கையனே ! வாராய்.      10.4.8

பெற்றத் தலைவன் எங்கோமான் பேரருளாளன் மதலாய் ! *

சுற்றக் குழாத்திளங் கோவே ! தோன்றிய தொல் புகழாளா !*

கற்றினந் தோறும் மறித்துக் கானம் திரிந்த களிறே ! *

எற்றுக்கென் அம்ம முண்ணாதே, எம்பெருமான் ! இருந்தாயே ?     10.4.9

இம்மை இடர் கெட வேண்டி ஏந்தெழில் தோள் கலிகன்றி *

செம்மைப் பனுவல் நூல் கொண்டு செங்கணெடியவன் தன்னை *

அம்ம முண்ணென் றுரைக்கின்ற பாடலிவை ஐந்து மைந்தும் *

மெய்ம்மை மனத்து வைத்தேத்த விண்ணவ ராகலுமாமே.          10.4.10

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.