Thirumozhi 10-7

பெரிய திருமொழி

பத்தாம் பத்து

ஏழாம் திருமொழி

மானமுடைத்து உங்களாயர் குலம்

அதனால், பிறர் மக்கள் தம்மை *

ஊனமுடையன செய்யப் பெறாயென்று

இரப்பன், உரப்ப கில்லேன் *

நானுமுரைத்திலேன் நந்தன் பணித்திலன்

நங்கைகாள்! நானென் செய்கேன் ? *

தானும் ஓர் கன்னியும் கீழையகத்துத்

தயிர் கடைகின்றான் போலும்.         10.7.1

காலை யெழுந்து கடைந்த இம்மோர் விற்கப்

போகின்றேன், கண்டே போனேன் *

மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால்

மற்று வந்தாரும் இல்லை *

மேலை யகத்து நங்காய் ! வந்து காண்மின்கள்

வெண்ணெயே யன்று * இருந்த

பாலும் பதின் குடம் கண்டிலேன்

பாவியேன் என் செய்கேன் ? என் செய்கேனோ ?           10.7.2

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் !

உறி மேலைத் தடா நிறைந்த *

வெள்ளி மலை யிருந்தாலொத்த வெண்ணெயை

வாரி விழுங்கியிட்டுக் *

கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்

கையெல்லாம் நெய், வயிறு

பிள்ளை பரமன்று * இவ்வேழுலகும் கொள்ளும்

பேதையேன் என் செய்கேனோ ?      10.7.3

மைந்நம்பு வேற்கண் நல்லாள்

முன்னம் பெற்ற, வளைவண்ண நன் மாமேனி *

தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது

அவன் இவை செய்தறியான் *

பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை

போகின்றவா ! தவழ்ந்திட்டு *

இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வில்லை

என் செய்கேன் என் செய்கேனோ ?             10.7.4

தந்தை புகுந்திலன் நான் இங்கிருந்திலேன்

தோழிமார் ஆருமில்லை *

சந்தமலர்க் குழலாள் தனியே விளையாடுமிடம் குறுகிப் *

பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் *

நந்தன் மதலைக் கிங்கென் கடவோம் ? நங்காய் !

என் செய்கேன் ? என் செய்கேனோ ?            10.7.5

மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன்

நந்தன் பெற்ற மதலை *

அண்ணல் இலைக் குழலூதி நம் சேரிக்கே

அல்லில் தான் வந்த பின்னை *

கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக்

கமலச் செவ்வாய் வெளுப்ப *

என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் !

என் செய்கேன் ? என் செய்கேனோ ?            10.7.6

ஆயிரங் கண்ணுடை இந்திரனாருக்கென்று

ஆயர் விழவெடுப்பப் *

பாசன நல்லன பண்டிகளால்

புகப் பெய்த அதனை யெல்லாம் *

போயிருந்து அங்கொரு பூத வடிவு கொண்டு

உன்மகன் இன்று நங்காய் ! *

மாயன் அதனை யெல்லாம் முற்ற, வாரி

வளைத்துண்டிருந்தான் போலும்.   10.7.7

தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்

ஓரோர் குடம் துற்றிடுமென்று *

ஆய்ச்சியர் கூடியழைக்கவும்

நான் இதற்கெள்கி இவனை நங்காய் ! *

சோத்தம் பிரான் ! இவை செய்யப் பெறாயென்று

இரப்பன், உரப்பகில்லேன் *

பேய்ச்சி முலையுண்ட பின்னை

இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே.         10.7.8

ஈடும் வலியுமுடைய இந்நம்பி பிறந்த எழு திங்களில் *

ஏடலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன் *

சேடன் திருமறு மார்பன் கிடந்து திருவடியால் * மலை போல்

ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே.        10.7.9

அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள் !

ஆயிர நாழி நெய்யைப் *

பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகளுண்கின்ற

பாகந்தான் வையார்களே *

கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில்

என் கைவலத் தாதுமில்லை *

நெஞ்சத்திருப்பன செய்து வைத்தாய் நம்பீ !

என் செய்கேன் ? என் செய்கேனோ ?         10.7.10

அங்ஙனம் தீமைகள் செய்வார்களோ ?

நம்பீ ! ஆயர் மடமக்களைப் *

பங்கய நீர் குடைந்தாடுகின்றார்கள்

பின்னே சென்றொளித்திருந்து *

அங்கு அவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு

அரவேரிடையார் இரப்ப *

மங்கை நல்லீர் ! வந்து கொண்மினென்று

மரமேறி யிருந்தாய் போலும்.          10.7.11

அச்சம் தினத்தனை யில்லை இப்பிள்ளைக்கு

ஆண்மையும் சேவகமும் *

உச்சியில் முத்தி வளர்த்தெடுத்தேனுக்கு

உரைத்திலன் தானின்று போய்ப் *

பச்சிலைப் பூங்கடம்பேறி

விசை கொண்டு பாய்ந்து புக்கு * ஆயிரவாய்

நச்சழற் பொய்கையில் நாகத்தினொடு

பிணங்கி நீ வந்தாய் போலும்.         10.7.12

தம்பர மல்லன ஆண்மைகளைத்

தனியே நின்று தாம் செய்வரோ ? *

எம்பெருமான் ! உன்னைப் பெற்ற வயிறுடையேன்

இனியானென் செய்கேன் ? *

அம்பர மேழும் அதிரும் இடிகுரல்

அங்கனல் செங்கணுடை *

வம்பவிழ் கானத்து மால் விடையோடு

பிணங்கி நீ வந்தாய் போலும்.        10.7.13

அன்னநடை மடவாய்ச்சி வயிறடித்து அஞ்ச அருவரைபோல்*

மன்னு கருங்களிற்றாருயிர் வவ்விய மைந்தனை, மாகடல் சூழ் *

கன்னி நன் மாமதிள் மங்கையர் காவலன் காமருசீர்க் கலிகன்றி *

இன்னிசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடரில்லையே.          10.7.14

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.