Thirumozhi 5-7

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

ஏழாம் திருமொழி

பண்டை நான்மறையும் வேள்வியும், கேள்விப்

பதங்களும் பதங்களின் பொருளும் *

பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்

பெருகிய புனலொடு நிலனும் *

கொண்டல் மாருதமும் குரைகடலேழும்

ஏழுமாமலைகளும் விசும்பும் *

அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.1      திருவரங்கம்

இந்திரன் பிரமன் ஈசனென்றிவர்கள்

எண்ணில் பல்குணங்களே இயற்றத் *

தந்தையும் தாயும் மக்களும் மிக்க

சுற்றமும் சுற்றி நின்றகலாப்

பந்தமும் * பந்தமறுப்பதோர் மருந்தும்

பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *

அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.2      திருவரங்கம்

மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்

வானமும் தானவருலகும் *

துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்

தொல்லை நான்மறைகளும் மறையப் *

பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்

பிறங்கிருள் நிறங்கெட * ஒருநாள்

அன்னமாயன்று அங்கரு மறை பயந்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.3      திருவரங்கம்

மாயிருங் குன்றமொன்று மத்தாக

மாசுண மதனொடும் அளவிப் *

பாயிரும் பெளவம் பகடு விண்டலறப்

படுதிரை விசும்பிடைப் படரச் *

சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்

தேவரும் தாமுடன் திசைப்ப *

ஆயிரந்தோளால் அலைகடல் கடைந்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.4      திருவரங்கம்

எங்ஙனே யுய்வர் ? தானவர் நினைந்தால்,

இரணியனிலங்கு பூணகலம் *

பொங்கு வெங்குருதி பொன்மலை பிளந்து

பொழிதரும் அருவி யொத்திழிய *

வெங்கண் வாளெயிற்றோர் வெள்ளி மாவிலங்கல்

விண்ணுறக் கனல் விழித்தெழுந்தது *

அங்ஙனே யொக்க அரியுருவானான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.5      திருவரங்கம்

ஆயிரங் குன்றம் சென்று தொக்கனைய

அடல்புரை எழில் திகழ் திரள்தோள்

ஆயிரந்துணிய * அடல் மழுப்பற்றி

மற்றவனகல் விசும்பணைய *

ஆயிரம் பெயரால் அமரர் சென்றிறைஞ்ச

அறிதுயிலலைகடல் நடுவே *

ஆயிரஞ் சுடர்வாய் அரவணைத் துயின்றான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.6      திருவரங்கம்,

திருப்பாற்கடல்

சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த

கொடுமையிற் கடுவிசை யரக்கன் *

எரிவிழித் திலங்கு, மணிமுடி பொடி செய்து

இலங்கை பாழ் படுப்பதற்கெண்ணி *

வரிசிலை வளைய, அடுசரம் துரந்து

மறிகடல் நெறிபட * மலையால்

அரிகுலம் பணிகொண்டு அலைகட லடைத்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.7      திருவரங்கம்

ஊழியாய் ஓமத்துச்சியாய், ஒருகா

லுடைய தேரொருவனாய் * உலகில்

சூழிமால் யானைத் துயர் கெடுத்து

இலங்கை மலங்க அன்று அடுசரம் துரந்து *

பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப்

பகலவனொளி கெடப் * பகலே

ஆழியால் அன்றங்கு ஆழியை மறைத்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.         5.7.8      திருவரங்கம்

பேயினார் முலையூண் பிள்ளையாய், ஒருகால்

பெருநிலம் விழுங்கி * அது உமிழ்ந்த

வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து

மணிமுடி வானவர் தமக்குச்

சேயனாய் * அடியேற்கு அணியனாய் வந்து

என் சிந்தையுள், வெந்துயரறுக்கும்

ஆயனாய் * அன்று குன்றமொன் றெடுத்தான்

அரங்கமாநகரமர்ந்தானே.      5.7.9      திருவரங்கம்

பொன்னும் மாமணியும் முத்தமும் சுமந்து

பொருதிரை மாநதிபுடை சூழ்ந்து *

அன்னமாடுலவும் அலைபுனல் சூழ்ந்த

அரங்கமாநகரமர்ந்தானை *

மன்னு மாமாட மங்கையர் தலைவன்

மானவேற் கலியன் வாயொலிகள் *

பன்னிய பனுவல் பாடுவார், நாளும்

பழவினைப் பற்றறுப்பாரே.  5.7.10    திருவரங்கம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.