Thirumozhi 5-8

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

எட்டாம் திருமொழி

ஏழை ஏதலன் கீழ்மகனென்னாது

இரங்கி, மற்று அவற்கு இன்னருள் சுரந்து *

மாழை மான்மடநோக்கி, உன் தோழி

உம்பி எம்பி என்றொழிந்திலை * உகந்த

தோழன் நீ எனக்கு, இங்கு ஒழியென்ற

சொற்கள் வந்து அடியேன் மனத்திருந்திட *

ஆழிவண்ண ! நின்னடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே!       5.8.1      திருவரங்கம்

வாதமாமகன் மர்க்கடம் விலங்கு

மற்றோர் சாதி யென்றொழிந்திலை * உகந்து

காதலாதரம் கடலினும் பெருகச், செய்

தகவினுக்கு இல்லை கைம்மாறென்று *

கோதில் வாய்மையினா யொடும், உடனே

உண்பன் நானென்ற ஒண்பொருள் * எனக்கும்

ஆதல் வேண்டு மென்று அடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே!       5.8.2      திருவரங்கம்

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை

வைகு தாமரை வாங்கிய வேழம்

முடியும் வண்ணம் * ஓர் முழுவலி முதலை

பற்ற, மற்றது நின் சரண் நினைப்பக் *

கொடியவாய் விலங்கின் னுயிர் மலங்கக்

கொண்ட சீற்றமொன் றுண்டுளதறிந்து * உன்

அடியனேனும் வந்து அடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே!       5.8.3      திருவரங்கம்

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம்

வெருவி வந்து நின் சரணெனச் சரணா *

நெஞ்சில் கொண்டு நின்னஞ்சிறைப் பறவைக்கு

அடைக்கலம் கொடுத்து, அருள் செய்ததறிந்து *

வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர்

கொடிய செய்வனவுள * அதற்கு அடியேன்

அஞ்சி வந்து நின்னடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே!      5.8.4      திருவரங்கம்

மாக மாநிலம் முழுதும் வந்திறைஞ்சும்

மலரடிக் கண்ட மாமறையாளன் *

தோகை மாமயிலன்னவரின்பம்.

துற்றிலாமையில் அத்த ! இங்கு ஒழிந்து *

போகம் நீயெய்திப் பின்னும் நம்மிடைக்கே

போதுவாயென்ற பொன்னருள் * எனக்கும்

ஆக வேண்டுமென்று அடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே !    5.8.5      திருவரங்கம்

மன்னு நான்மறை மாமுனி பெற்ற

மைந்தனை, மதியாத வெங்கூற்றந்

தன்னை யஞ்சி * நின் சரணெனச் சரணாய்த்

தகவில் காலனை யுக முனிந்தொழியா *

பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம்

எண்ணிய பேரருள் * எனக்கும்

அன்னதாகுமென்று அடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே !    5.8.6      திருவரங்கம்

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்

உனக்கு முன் தந்த, அந்தணனொருவன் *

காதலென் மகன் புகலிடம் காணேன்

கண்டு நீ தருவா யெனக்கு என்று *

கோதில் வாய்மையினான் உனை வேண்டிய

குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய் *

ஆதலால் வந்து உன் னடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே !    5.8.7      திருவரங்கம்

வேதவாய் மொழி அந்தண னொருவன்

எந்தை ! நின் சரண் * என்னுடை மனைவி

காதல் மக்களைப் பயத்தலும் காணாள்

கடியதோர் தெய்வம் கொண்டொளிக்கு மென்றழைப்ப *

ஏதலார் முன்னே இன்னருள் அவற்குச் செய்து

உன் மக்கள் மற்றிவரென்று கொடுத்தாய் *

ஆதலால் வந்து உன் னடியிணை யடைந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே !    5.8.8      திருவரங்கம்

துளங்கு நீண்முடி யரசர் தம் குரிசில்

தொண்டை மன்னவன் திண்திறலொருவற்கு *

உளங்கொளன்பினொடு இன்னருள் சுரந்து

அங்கோடு நாழிகை யேழுடனிருப்ப *

வளங்கொள் மந்திரம் மற்றவற்கு, அருளிச்

செய்தவாறு அடியே னறிந்து * உலகம்

அளந்த பொன்னடியே யடைந்துய்ந்தேன்

அணிபொழில் திருவரங்கத்தம்மானே !    5.8.9      திருவரங்கம்

மாட மாளிகை சூழ் திருமங்கை

மன்னன், ஒன்னலர் தங்களை வெல்லும் *

ஆடல் மாவலவன் கலிகன்றி

அணிபொழில் திருவரங்கத்தம்மானை *

நீடுதொல் புகழாழி வல்லானை

எந்தையை நெடுமாலை நினைந்த *

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் !

பாட நும்மிடைப் பாவம் நில்லாவே.       5.8.10    திருவரங்கம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.