Thirumozhi 5-9

பெரிய திருமொழி

ஐந்தாம் பத்து

ஒன்பதாம் திருமொழி

கையிலங்காழி சங்கன், கருமுகில் திருநிறத்தன் *

பொய்யிலன் மெய்யன், தன்தாளடைவரேல் அடிமை யாக்கும் *

செய்யலர் கமலமோங்கு, செறிபொழில் தென் திருப்பேர் *

பையரவணையான், நாமம் பரவி நானுய்ந்தவாறே !  5.9.1      திருப்பேர்நகர்

வங்கமார் கடல்களேழும், மலையும் வானகமும் மற்றும் *

அங்கண்மா ஞாலமெல்லாம், அமுது செய்துமிழ்ந்த எந்தை *

திங்கள் மாமுகிலணவு, செறிபொழில் தென் திருப்பேர் *

எங்கள் மால் இறைவன், நாமம் ஏத்தி நானுய்ந்தவாறே !   5.9.2      திருப்பேர்நகர்

ஒருவனை உந்திப்பூமேல், ஓங்குவித்து ஆகந்தன்னால் *

ஒருவனைச் சாபம் நீக்கி, உம்பராளென்று விட்டான் *

பெருவரை மதிள்கள் சூழ்ந்த, பெருநகரரவணைமேல் *

கருவரை வண்ணன், தென்பேர் கருதி நானுய்ந்தவாறே !    5.9.3      திருப்பேர்நகர்

ஊனமர் தலையொன்றேந்தி, உலகெலாம் திரியும் ஈசன் *

ஈனமர் சாபம் நீக்காயென்ன, ஒண்புனலை யீந்தான் *

தேனமர் பொழில்கள் சூழ்ந்த, செறிவயல் தென்திருப்பேர் *

வானவர் தலைவன், நாமம் வாழ்த்தி நானுய்ந்தவாறே !     5.9.4      திருப்பேர்நகர்

வக்கரன் வாய் முன்கீண்ட மாயனே ! என்று வானோர்

புக்கு * அரண் தந்தருளா யென்னப், பொன்னாகத்தானை *

நக்கரி யுருவமாகி, நகம் கிளர்ந்திடந்துகந்த *

சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன், தாளடைந்துய்ந்தேனே.             5.9.5                திருப்பேர்நகர்

விலங்கலால் கடலடைத்து, விளங்கிழை பொருட்டு வில்லால் *

இலங்கை மாநகர்க் கிறையவன், இருபது புயம் துணித்தான் *

நலங்கொள் நான்மறை வல்லார்கள், ஓத்தொலி ஏத்தக் கேட்டு *

மலங்கு பாய் வயல் திருப்பேர், மருவி நான் வாழ்ந்தவாறே !       5.9.6      திருப்பேர்நகர்

வெண்ணெய் தானமுதுசெய்ய, வெகுண்டு மத்தாய்ச்சியோச்சிக் *

கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட, வெட்டென்றிருந்தான் *

திண்ணமா மதிள்கள் சூழ்ந்த, தென்திருப்பேருள் * வேலை

வண்ணனார், நாமம் நாளும் வாய் மொழிந்துய்ந்தவாறே !  5.9.7      திருப்பேர்நகர்

அம்பொனாருலக மேழு மறிய, ஆய்ப்பாடி தன்னுள் *

கொம்பனார் பின்னை கோலம், கூடுதற்கு ஏறு கொன்றான் *

செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த,தென் திருப்பேருள் * மேவும்

எம்பிரான் நாமம் நாளும், ஏத்தி நானுய்ந்தவாறே !      5.9.8      திருப்பேர்நகர்,

திருவாய்ப்பாடி (கோகுலம்)

நால்வகை வேதம் ஐந்து வேள்வி, ஆறங்கம் வல்லார் *

மேலை வானவரில் மிக்க, வேதியர் ஆதிகாலம் *

சேலுகள் வயல் திருப்பேர், செங்கண் மாலோடும் வாழ்வார் *

சீலமா தவத்தர் சிந்தையாளி, என் சிந்தையானே.       5.9.9      திருப்பேர்நகர்

வண்டறை பொழில் திருப்பேர், வரியரவணையில் * பள்ளி

கொண்டுறைகின்ற மாலைக், கொடிமதிள் மாடமங்கை *

திண்திறல் தோள் கலியன், செஞ்சொலால் மொழிந்த மாலை

கொண்டு * இவை பாடியாடக், கூடுவர் நீள்விசும்பே.         5.9.10    திருப்பேர்நகர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.