Thirumozhi 7-4

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

நான்காம் திருமொழி

கண் சோர வெங்குருதி வந்திழிய

வெந்தழல் போல் கூந்தலாளை *

மண்சேர முலையுண்ட மாமதலாய் !

வானவர் தம் கோவே ! என்று *

விண் சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு

மணிமாடமல்கு * செல்வத்

தண்சேறை யெம்பெருமான் தாள்

தொழுவார் காண்மின் என் தலை மேலாரே.    7.4.1      திருச்சேறை

அம்புருவ வரிநெடுங்கண், அலர் மகளை

வரை யகலத்தமர்ந்து * மல்லல்

கொம்புருவ விளங்கனி மேல்

இளங்கன்று கொண்டெறிந்த கூத்தர் போலாம் *

வம்பலரும் தண்சோலை, வண்சேறை

வானுந்து கோயில் மேய *

எம்பெருமான் தாள் தொழுவார்

எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே.    7.4.2      திருச்சேறை

மீதோடி வாளெயிறு மின்னிலக

முன்விலகும் உருவினாளைக் *

காதோடு கொடி மூக்கன்றுடனறுத்த

கைத்தலத்தா ! என்று நின்று *

தாதோடு வண்டலம்பும்

தண்சேறை யெம்பெருமான் தாளை யேத்திப்

போதோடு புனல் தூவும் புண்ணியரே

விண்ணவரில் பொலிகின்றாரே.      7.4.3      திருச்சேறை

தேராளும் வாளரக்கன்

தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப் *

போராளும் சிலையதனால், பொருகணைகள்

போக்குவித்தாய் ! என்று * நாளும்

தாராளும் வரைமார்பன்

தண்சேறை யெம்பெருமான் * உம்பராளும்

பேராளன் பேரோதும் பெரியோரை

ஒருகாலும் பிரிகிலேனே.    7.4.4      திருச்சேறை

வந்திக்கும் மற்றவர்க்கும், மாசுடம்பில்

வல் அமணர் தமக்கும் அல்லேன் *

முந்திச் சென்றரி யுருவாய், இரணியனை

முரணழித்த முதல்வர்க்கல்லால் *

சந்தப் பூமலர்ச் சோலைத்

தண்சேறை யெம்பெருமான் தாளை * நாளும்

சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி

எப்பொழுதும் தித்திக்குமே.   7.4.5      திருச்சேறை

பண்டு ஏனமாய் உலகை, அன்றிடந்த

பண்பாளா ! என்று நின்று *

தொண்டானேன், திருவடியே துணையல்லால்

துணையிலேன் சொல்லுகின்றேன் *

வண்டேந்தும் மலர்ப்புறவில், வண்சேறை

யெம்பெருமானடியார் தம்மைக்

கண்டேனுக்கு * இதுகாணீர் என்நெஞ்சும்

கண்ணிணையும் களிக்குமாறே.       7.4.6      திருச்சேறை

பைவிரியும் வரியரவில், படுகடலுள்

துயிலமர்ந்த பண்பா ! என்றும் *

மைவிரியும் மணிவரை போல் மாயவனே !

என்றென்றும் * வண்டார் நீலம்

செய்விரியும், தண்சேறை யெம்பெருமான்

திருவடியைச் சிந்தித்தேற்கு * என்

ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு

ஆளாம் என் அன்பு தானே.   7.4.7      திருச்சேறை,

திருப்பாற்கடல்

உண்ணாது வெங்கூற்றம்

ஓவாத பாவங்கள் சேரா * மேலை

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்

மென்தளிர் போலடியினானைப் *

பண்ணார வண்டியம்பும்

பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் தன்னைக் *

கண்ணாரக் கண்டுருகிக்

கையாரத் தொழுவாரைக் கருதுங்காலே.           7.4.8      திருச்சேறை

கள்ளத்தேன் பொய்யகத்தேனாதலால்

போதொரு கால் கவலை யென்னும் *

வெள்ளத்தேற்கு என்கொலோ?

விளை வயலுள் கருநீலம் களைஞர் தாளால்

தள்ளத் * தேன்மண நாறும்

தண்சேறை யெம்பெருமான் தாளை * நாளும்

உள்ளத்தே வைப்பாருக்கு, இது காணீர்

என்னுள்ளம் உருகுமாறே.    7.4.9      திருச்சேறை

பூமாண் சேர் கருங்குழலார் போல் நடந்து

வயல் நின்ற பெடையோடு அன்னம் *

தேமாவினின் னிழலில் கண் துயிலும்

தண்சேறை யம்மான் தன்னை *

வாமான் தேர்ப் பரகாலன் கலிகன்றி

ஒலிமாலை கொண்டு தொண்டீர் ! *

தூமாண்சேர் பொன்னடி மேல் சூட்டுமின்

நும் துணைக் கையால் தொழுது நின்றே.      7.4.10    திருச்சேறை

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.