Thiruvoymozhi 8-10

திருவாய்மொழி

எட்டாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி

நெடுமாற்கு அடிமை செய்வேன்போல் அவனைக்கருத வஞ்சித்துத் *

தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் *

கொடுமா வினையேன், அவனடியா ரடியே கூடும் இதுவல்லால் *

விடுமா றென்பதென் ? அந்தோ ! வியன் மூவுலகு பெறினுமே.   8.10.1

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் *

புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ்ச் *

சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி * இம்மையே

பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே ?            8.10.2

உறுமோ பாவியேனுக்கு? இவ்வுலகம் மூன்றும் உடன் நிறையச் *

சிறுமா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன் *

நறுமா விரை நாள் மலரடிக் கீழ்ப் புகுதல், அன்றி அவனடியார் *

சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே.   8.10.3

இங்கே திரிந்தேற்கு இழுக்குற்றென்? இருமாநிலம் முன்னுண்டுமிழ்ந்த *

செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக் கணென்னம்மான் *

பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள்வடிவு என்மனத்ததாய் *

அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருளிலே.   8.10.4

வழிபட்டோட அருள் பெற்று மாயன் கோல மலரடிக் கீழ்ச் *

சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும் *

இழிபட்டோடும் உடலினில் பிறந்து தன் சீரியான் கற்று *

மொழி பட்டோடும் கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ? முழுதுமே.     8.10.5

நுகர்ச்சி யுறுமோ?, மூவுலகின் வீடு பேறு தன் கேழில் *

புகர்ச் செம்முகத்த களிறட்ட, பொன்னாழிக்கை என்னம்மான் *

நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள், நீண்ட அசுரருயிரெல்லாம் *

தகர்த்துண் டுழலும் புட்பாகன், பெரிய தனி மாப்புகழே.        8.10.6

தனிமாப் புகழே எஞ்ஞான்றும், நிற்கும்படியாய்த் தான்தோன்றி *

முனிமாப் பிரம முதல்வித்தாய், உலக மூன்றும் முளைப்பித்த *

தனிமாத் தெய்வத் தளிரடிக் கீழ்ப் புகுதலன்றி, அவனடியார் *

நனிமாக் கலவி யின்பமே, நாளும் வாய்க்க நங்கட்கே.         8.10.7

நாளும் வாய்க்க நங்கட்கு, நளிநீர்க் கடலைப் படைத்துத் * தன்

தாளும் தோளும் முடிகளும், சமனிலாத பல பரப்பி *

நீளும் படர் பூங்கற்பகக் காவும், நிறை பல்நாயிற்றின் *

கோளுமுடைய மணிமலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.           8.10.8

தமர்கள் கூட்ட வல்வினையை, நாசம் செய்யும் சதுமூர்த்தி *

அமர் கொளாழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன் *

குமரன் கோல ஐங்கணை வேள் தாதை, கோதிலடியார் தம் *

தமர்கள் தமர்கள் தமர்களாம், சதிரே வாய்க்க தமியேற்கே.         8.10.9

வாய்க்க தமியேற்கு ஊழிதோ றூழியூழி * மாகாயாம்

பூக்கொள் மேனி, நான்கு தோள் பொன்னாழிக் கை என்னம்மான் *

நீக்கமில்லா அடியார்தம், அடியா ரடியா ரடியார் எங்

கோக்கள் * அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே.           8.10.10

நல்ல கோட்பாட் டுலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த *

அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன் *

சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *

நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே.   8.10.11

**********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.