Thiruvoymozhi 10-1

திருவாய்மொழி

பத்தாம் பத்து

முதல் திருவாய்மொழி

தாளதாமரைத், தடமணி வயல் திருமோகூர் *

நாளும் மேவி நன்கமர்ந்து நின்று, அசுரரைத் தகர்க்கும் *

தோளும் நான்குடைச், சுரிகுழல் கமலக் கண்கனிவாய் *

காளமேகத்தை யன்றி, மற்றொன்றிலம் கதியே.       10.1.1    திருமோகூர்

இலம் கதி மற்றொன்று, எம்மைக்கும் ஈன்தண் துழாயின் *

அலங்கலங் கண்ணி, ஆயிரம் பேருடை யம்மான் *

நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ், திருமோகூர் *

நலங்கழ லவனடி நிழல் தடமன்றி, யாமே.      10.1.2    திருமோகூர்

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம், என்றென்றலற்றி *

நின்று நான்முகன் அரனொடு, தேவர்கள் நாட *

வென்று இம்மூவுலகளித்து உழல்வான், திருமோகூர் *

நன்று நாம் இனி நணுகுதும், நமதிடர் கெடவே.         10.1.3    திருமோகூர்

இடர் கெட எம்மைப் போந்தளியாய், என்றென்றேத்திச் *

சுடர்கொள் சோதியைத், தேவரும் முனிவரும் தொடரப் *

படர்கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான், திருமோகூர் *

இடர் கெட அடி பரவுதும், தொண்டீர் ! வம்மினே.      10.1.4    திருமோகூர்

தொண்டீர் வம்மின், நம் சுடரொளி ஒருதனி முதல்வன் *

அண்ட மூவுலகளந்தவன், அணி திருமோகூர் *

எண்திசையும் ஈன்கரும்பொடு, பெருஞ்செந்நெல் விளைய *

கொண்ட கோயிலை வலஞ்செய்து, இங்கு ஆடுதும் கூத்தே.           10.1.5    திருமோகூர்

கூத்தன் கோவலன், குதற்று வல்லசுரர்கள் கூற்றம் *

ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் *

வாய்த்த தண்பணை வளவயல்சூழ், திருமோகூர் *

ஆத்தன் * தாமரை யடியன்றி, மற்றிலம், அரணே.         10.1.6    திருமோகூர்

மற்றிலம் அரண், வான் பெரும் பாழ் தனி முதலா *

சுற்றும் நீர் படைத்து, அதன் வழித் தொல் முனிமுதலா *

முற்றும் தேவரோடு உலகு செய்வான், திருமோகூர் *

சுற்றி நாம் வலஞ் செய்ய, நம் துயர் கெடும் கடிதே.         10.1.7    திருமோகூர்

துயர் கெடும், கடிதடைந்து வந்து அடியவர் தொழுமின் *

உயர்கொள் சோலை ஒண்தட மணியொளி, திருமோகூர் *

பெயர்க ளாயிரமுடைய, வல்லரக்கர் புக்கழுந்த *

தயரதன் பெற்ற, மரதக மணித் தடத்தினையே.        10.1.8    திருமோகூர்

மணித்தடத் தடிமலர்க் கண்கள், பவளச் செவ்வாய் *

அணிக்கொள் நால் தடந்தோள், தெய்வம், அசுரரை என்று *

துணிக்கும் வல்லரட்டன் உறைபொழில், திருமோகூர் *

நணித்து நம்முடை நல்லரண், நாம் அடைந்தனமே.  10.1.9    திருமோகூர்

நாமடைந்த நல்லரண், நமக்கென்று நல்லமரர் *

தீமை செய்யும் வல்லசுரரை, அஞ்சிச் சென்றடைந்தால் *

காமரூபங் கொண்டு எழுந்தளிப்பான், திருமோகூர் *

நாமமே நவின்று எண்ணுமின், ஏத்துமின் நமர்காள் !              10.1.10  திருமோகூர்

ஏத்துமின் நமர்காள் ! என்று, தான் குடமாடு

கூத்தனை * குருகூர்ச் சடகோபன், குற்றேவல்கள் *

வாய்த்த ஆயிரத்துள் இவை, வண்திருமோகூர்க்கு *

ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு, இடர் கெடுமே.    10.1.11  திருமோகூர்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.