Thiruvoymozhi 10-2

திருவாய்மொழி

பத்தாம் பத்து

இரண்டாம் திருவாய்மொழி

கெடும் இடராய வெல்லாம், கேசவா வென்ன * நாளும்

கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும், குறுக கில்லார் *

விடமுடை யரவில், பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் *

தடமுடை வயல் அனந்தபுரநகர், புகுதும் இன்றே.     10.2.1    திருவனந்தபுரம்

இன்று போய்ப் புகுதிராகில், எழுமையும் ஏதம் சாரா *

குன்று நேர் மாடமாடே, குருந்து சேர் செருந்தி புன்னை *

மன்றலர் பொழில், அனந்தபுரநகர் மாயன் நாமம்

ஒன்றும் * ஓராயிரமாம், உள்ளுவார்க்கு உம்பரூரே.    10.2.2    திருவனந்தபுரம்

ஊரும் புட்கொடியுமஃதே, உலகெல்லா முண்டுமிழ்ந்தான் *

சேரும் தண்ணனந்தபுரம், சிக்கெனப் புகுதிராகில் *

தீரும் நோய்வினைகளெல்லாம், திண்ணம்நாம் அறியச் சொன்னோம் *

பேருமோராயிரத்துள் ஒன்று, நீர் பேசுமினே.     10.2.3    திருவனந்தபுரம்

பேசுமின் கூசமின்றிப், பெரிய நீர் வேலை சூழ்ந்து *

வாசமே கமழும் சோலை, வயலணி யனந்தபுரம் *

நேசஞ் செய்து உறைகின்றானை, நெறிமையால் மலர்கள் தூவிப் *

பூசனை செய்கின்றார்கள், புண்ணியம் செய்தவாறே !              10.2.4    திருவனந்தபுரம்

புண்ணியம் செய்து, நல்ல புனலொடு மலர்கள் தூவி *

எண்ணுமின் எந்தை நாமம், இப்பிறப் பறுக்கும் அப்பால் *

திண்ணம் நாம் அறியச் சொன்னோம், செறிபொழிலனந்தபுரத்து *

அண்ணலார் கமலபாதம் அணுகுவார், அமரராவார்.     10.2.5    திருவனந்தபுரம்

அமரராய்த் திரிகின்றார்கட்கு, ஆதிசே ரனந்தபுரத்து *

அமரர் கோனர்ச்சிக்கின்று, அங்ககப் பணி செய்வர் விண்ணோர் *

நமர்களோ ! சொல்லக் கேண்மின், நாமும் போய் நணுக வேண்டும் *

குமரனார் தாதை துன்பம் துடைத்த, கோவிந்தனாரே.      10.2.6    திருவனந்தபுரம்

துடைத்த கோவிந்தனாரே, உலகுயிர் தேவும் மற்றும் *

படைத்த எம் பரம மூர்த்தி, பாம்பணைப் பள்ளி கொண்டான் *

மடைத்தலை வாளை பாயும் வயலணி, அனந்தபுரம் *

கடைத்தலை சீய்க்கப் பெற்றால், கடுவினை களையலாமே.         10.2.7    திருவனந்தபுரம்

கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை *

இடவகை கொண்டதென்பர், எழிலணி யனந்தபுரம் *

படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண *

நடமினோ நமர்களுள்ளீர், நாம் உமக்கறியச் சொன்னோம்.  10.2.8    திருவனந்தபுரம்

நாம் உமக்கு அறியச் சொன்ன, நாள்களும் நணியவான *

சேமம் நன்குடைத்துக் கண்டீர், செறிபொழிலனந்தபுரம் *

தூமநல் விரை மலர்கள், துவளற ஆய்ந்து கொண்டு *

வாமனனடிக் கென்றேத்த, மாய்ந்தறும் வினைகள் தாமே.  10.2.9    திருவனந்தபுரம்

மாய்ந்தறும் வினைகள் தாமே, மாதவா ! என்ன * நாளும்

ஏய்ந்த பொன்மதிள், அனந்தபுர நகரெந்தைக் கென்று *

சாந்தொடு விளக்கம் தூபம், தாமரை மலர்கள் நல்ல *

ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார், அந்தமில் புகழினாரே.   10.2.10  திருவனந்தபுரம்

அந்தமில் புகழ், அனந்தபுர நகராதி தன்னைக் *

கொந்தலர் பொழில், குருகூர் மாறன் சொல்லாயிரத்துள் *

ஐந்தினோடைந்தும் வல்லார், அணைவர் போய் அமருலகில் *

பைந்தொடி மடந்தையர் தம், வேய்மரு தோளிணையே.   10.2.11  திருவனந்தபுரம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.