Thirumozhi 2-10
பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் * எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேலோர் இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை * துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்யச் * செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. 2.10.1 திருக்கோவலூர் கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் […]
Thirumozhi 2-9
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஒன்பதாம் திருமொழி சொல்லுவன் சொற்பொருள் தானவையாய்ச் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் * நல்லரண் நான்முகன் நாரணனுக்கு இடம், தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி * பல்லவன் வில்லவனென்று உலகில் பலராய்ப் பலவேந்தர் வணங்கு கழல் பல்லவன் * மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமதுவே. 2.9.1 பரமேச்சுர விண்ணகரம் கார்மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் * தன் உந்தித் […]
Thirumozhi 2-8
பெரிய திருமொழி இரண்டாம் பத்து எட்டாம் திருமொழி திரிபுரம் மூன்றெரித்தானும் மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்ப * முரிதிரைமா கடல் போல் முழங்கி மூவுலகும் முறையால் வணங்க * எரியென கேசர வாளெயிற்றோடு இரணியனாகம் இரண்டு கூறா * அரியுருவாம் இவரார் கொல் ? என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே. 2.8.1 அட்டபுயகரம் வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேதமுரைத்து இமையோர் வணங்கும் * செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர், […]
Thirumozhi 2-7
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஏழாம் திருமொழி திவளும் வெண்மதிபோல் திருமுகத்தரிவை செழுங்கடலமுதினிற் பிறந்த அவளும் * நின்னாகத்திருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் * குவளையங்கண்ணி கொல்லியம்பாவை சொல்லு, நின்தாள் நயந்திருந்த இவளை * உன்மனத்தால் என் நினைந்திருந்தாய் ? இடவெந்தை எந்தை பிரானே ! 2.7.1 திருவிடைவெந்தை துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணைமுலை சாந்துகொண்டு அணியாள் * குளம்படு குவளைக் கண்ணிணை எழுதாள் கோலநன்மலர் குழற்கு அணியாள் * […]
Thirumozhi 2-6
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஆறாம் திருமொழி நண்ணாத வாளவுணர் இடைப்புக்கு * வானவரைப் பெண்ணாகி, அமுதூட்டும் பெருமானார் * மருவினிய தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை * எண்ணாதே இருப்பாரை, இறைப்பொழுதும் எண்ணோமே. 2.6.1 திருக்கடல்மல்லை பார்வண்ண மடமங்கை, பனிநன் மாமலர்க் கிழத்தி * நீர்வண்ணன் மார்வத்தில், இருக்கையை முன் நினைந்தவனூர் * கார்வண்ண முதுமுந்நீர்க், கடல்மல்லைத் தலசயனம் * ஆர் எண்ணும் நெஞ்சுடையார், அவரெம்மை ஆள்வாரே. 2.6.2 திருக்கடல்மல்லை ஏனத்தினுருவாகி, நிலமங்கை யெழில் […]
Thirumozhi 2-5
பெரிய திருமொழி இரண்டாம் பத்து ஐந்தாம் திருமொழி பாராயது உண்டுமிழ்ந்த பவளத் தூணைப் படுகடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட சீரானை * எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே, முளைத்தெழுந்த தீங்கரும்பினைப் * போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர் மருதமிற நடந்த பொற் குன்றினைக் * காரானை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே. 2.5.1 திருக்கடல்மல்லை பூண்டவத்தம் பிறர்க் கடைந்து தொண்டு பட்டுப் பொய்ந் நூலை மெய்ந் நூலென்றென்று […]
Thirumozhi 2-4
பெரிய திருமொழி இரண்டாம் பத்து நான்காம் திருமொழி அன்றாயர் குலக் கொடியோடு அணிமா மலர் மங்கையொடு அன்பளவி * அவுணர்க்கு என்றானும் இரக்க மிலாதவனுக்கு உறையுமிட மாவது * இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல் நகர் * நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மாமலையாவது நீர்மலையே. 2.4.1 திருக்குடந்தை (கும்பகோணம்), திருவாலி, திருநறையூர், திருக்கோவலூர், திருநீர்மலை காண்டாவன மென்பதோர் காடு அமரர்க் […]
Thirumozhi 2-3
பெரிய திருமொழி இரண்டாம் பத்து மூன்றாம் திருமொழி விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன் தன்னைப் * புரமெரி செய்த சிவன், உறு துயர் களை தேவை * பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானைச் * சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. 2.3.1 திருவல்லிக்கேணி வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை * […]
Thirumozhi 2-2
பெரிய திருமொழி இரண்டாம் பத்து இரண்டாம் திருமொழி காசை யாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் * நாசமாக நம்ப வல்ல நம்பி, நம்பெருமான் * வேயினன்ன தோள்மடவார், வெண்ணெயுண்டான் இவனென்று * ஏசநின்ற எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. 2.2.1 திருவெவ்வுள் தையலாள் மேல் காதல் செய்த, தானவன் வாளரக்கன் * பொய்யிலாத பொன்முடிகள், ஒன்பதோடொன்றும் * அன்று செய்த வெம்போர் தன்னில், அங்கோர் செஞ்சரத்தாலுருள * எய்த எந்தை எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே. […]
Thirumozhi 2-1
பெரிய திருமொழி இரண்டாம் பத்து முதல் திருமொழி வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே ! இனிது வந்து * மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை * கானவரிடு காரகில் புகை, ஓங்கு வேங்கடம் மேவிய * மாண்குற ளான அந்தணற்கு, இன்று அடிமைத் தொழில் பூண்டாயே. 2.1.1 திருவேங்கடம் திருப்பதி உறவு சுற்றம் என்று ஒன்றிலா ஒருவன் உகந்து, அவர் தம்மை, * மண்மிசைப் […]