Thirumozhi 2-10

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

பத்தாம் திருமொழி

மஞ்சாடு வரையேழும் கடல்களேழும்

வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் *

எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேலோர்

இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை *

துஞ்சா நீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்

தூய நான்மறையாளர் சோமுச் செய்யச் *

செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.1    திருக்கோவலூர்

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்

தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில் *

சந்தணி மென்முலை மலராள் தரணிமங்கை

தாமிருவர் அடிவருடும் தன்மையானை *

வந்தனை செய்து இசையேழ் ஆறங்கம், ஐந்து

வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் *

சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும், செல்வத்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.2    திருக்கோவலூர்

கொழுந்தலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்

கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற்கு எள்கி *

அழுந்திய மாகளிற்றினுக்கு அன்று ஆழியேந்தி

அந்தரம் மேவரத் தோன்றி அருள் செய்தானை *

எழுந்த மலர்க்கருநீலம் இருந்தில் காட்ட

இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்டச் *

செழுந்தடநீர்க் கமலம் தீவிகை போல் காட்டும்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.3    திருக்கோவலூர்

தாங்கரும் போர் மாலிபடப் பறவை யூர்ந்து

தராதலத்தோர் குறைமுடித்த தன்மையானை *

ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்

அடியவர்கட்கு ஆரமுதமானான் தன்னைக் *

கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்

குழாவரி வண்டிசை பாடும் பாடல் கேட்டுத் *

தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.4    திருக்கோவலூர்

கறைவளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி

கணையொன்றினால் மடிய * இலங்கை தன்னுள்

பிறையெயிற்று வாளரக்கர் சேனையெல்லாம்

பெருந்தகையோடுடன் துணித்த பெம்மான் தன்னை *

மறை வளரப் புகழ் வளர மாடம் தோறும்

மண்டப மொண்தொளி யனைத்தும் வாரமோதச் *

சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.             2.10.5    திருக்கோவலூர்

உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று, அங்கு

உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடார்க்கத் *

தறியார்ந்த கருங்களிறே போல நின்று

தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை *

வெறியார்ந்த மலர்மகள் நாமங்கையோடு

வியன்கலை எண்தோளி * நாள் விளங்கு செல்வச்

செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.6    திருக்கோவலூர்

இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி

இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து *

வரும் சகடம் இற உதைத்து மல்லை யட்டு

வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானைக் *

கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று

காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்டச் *

செருந்தி மிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.              2.10.7    திருக்கோவலூர்

பாரேறு பெரும் பாரம் தீரப், பண்டு

பாரதத்துத் தூதியங்கிப் * பார்த்தன் செல்வத்

தேரேறு சாரதியாய், எதிர்ந்தார் சேனை

செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னைப் *

போரேறொன் றுடையானும் அளகைக் கோனும்

புரந்தரனும் நான்முகனும் பொருந்துமூர் போல் *

சீரேறு மறையாளர் நிறைந்த, செல்வத்

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.           2.10.8    திருக்கோவலூர்

தூவடிவில் பார்மகள் பூமங்கையோடு *

சுடராழி சங்கு இருபால் பொலிந்து தோன்றக் *

காவடிவில் கற்பகமே போல நின்று

கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானைச் *

சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை

செம்பொன்செய் திருவுருவமானான் தன்னைத் *

தீவடிவில் சிவனயனே போல்வார் மன்னு,

திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே.      2.10.9    திருக்கோவலூர்

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை,

நீல மரதகத்தை மழைமுகிலே போல்வான் தன்னைச் *

சீரணங்கு மறையாளர் நிறைந்த, செல்வத்

திருக்கோவலூரதனுள் கண்டேனென்று *

வாரணங்கு முலை மடவார் மங்கைவேந்தன்

வாள்கலியன் ஒலியைந்துமைந்தும் வல்லார் *

காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்

கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.     2.10.10  திருக்கோவலூர்

**********

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.