Thirumozhi 2-1

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

முதல் திருமொழி

 

வானவர் தங்கள் சிந்தை போல

என் நெஞ்சமே ! இனிது வந்து * மாதவ

மானவர் தங்கள் சிந்தை

அமர்ந்து உறைகின்ற எந்தை *

கானவரிடு காரகில் புகை,

ஓங்கு வேங்கடம் மேவிய * மாண்குற

ளான அந்தணற்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.1      திருவேங்கடம் திருப்பதி

 

உறவு சுற்றம் என்று ஒன்றிலா ஒருவன்

உகந்து, அவர் தம்மை, * மண்மிசைப்

பிறவியே கெடுப்பான்

அது கண்டு என் நெஞ்ச மென்பாய் ! *

குறவர் மாதர்களோடு, வண்டு குறிஞ்சி

மருளிசை பாடும் * வேங்கடத்து

அறவனாயகற்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.2      திருவேங்கடம் திருப்பதி

 

இண்டையாயின கொண்டு, தொண்டர்கள்

ஏத்துவார் உறவோடும் * வானிடைக்

கொண்டு போயிடவும்

அதுகண்டு என் நெஞ்ச மென்பாய் ! *

வண்டு வாழ் வடவேங்கடமலை

கோயில் கொண்டு அதனோடும் * மீமிசை

அண்ட மாண்டிருப்பாற்கு

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.3      திருவேங்கடம் திருப்பதி

 

பாவி ! யாது செய்தாய் ? என் நெஞ்சமே ! *

பண்டு தொண்டு செய்தாரை, மண்மிசை

மேவி ஆட்கொண்டு போய்

விசும்பேற வைக்கும் எந்தை *

கோவி நாயகன், கொண்டலுந் துயர்

வேங்கடமலை யாண்டு * வானவர்

ஆவியா யிருப்பாற்கு

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.4      திருவேங்கடம் திருப்பதி

 

பொங்கு போதியும் பிண்டியும் உடைப்

புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை *

தங்கள் தேவரும் தாங்களுமேயாக

என்நெஞ்சமென்பாய் ! *

எங்கும் வானவர் தானவர் நிறைந்தேத்தும்

வேங்கடம் மேவி நின்றருள் *

அங்கணாயகற்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.      2.1.5      திருவேங்கடம் திருப்பதி

 

துவரி யாடையர் மட்டையர்

சமண் தொண்டர்கள் மண்டியுண்டு, * பின்னரும்

தமரும் தாங்களுமே தடிக்க

என் நெஞ்ச மென்பாய் *

கவரி மாக்கணம் சேரும்,

வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை *

அமர நாயகற்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.6      திருவேங்கடம் திருப்பதி

 

தருக்கினால் சமண் செய்து,

சோறு தண்தயிரினால் திரளை * மிடற்றிடை

நெருக்குவா ரலக்கணது கண்டு

என் நெஞ்ச மென்பாய் ! *

மருட்கள் வண்டுகள் பாடும்,

வேங்கடம் கோயில் கொண்டதனோடும் * வானிடை

அருக்கன் மேவி நிற்பாற்கு

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.7      திருவேங்கடம் திருப்பதி

 

சேயன் அணியன் சிறியன் பெரியன்

என்பதும், சிலர் பேசக்கேட்டிருந்

தே * என் நெஞ்ச மென்பாய் !

எனக்கு ஒன்று சொல்லாதே *

வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி

வேங்கட மலை கோயில் மேவிய *

ஆயர் நாயகற்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.8      திருவேங்கடம் திருப்பதி

 

கூடியாடி உரைத்ததே உரைத்தாய்

என் நெஞ்சமென்பாய் ! துணிந்து கேள் *

பாடியாடிப் பலரும்

பணிந்தேத்திக் காண்கிலார் *

ஆடு தாமரையோனும் ஈசனும்

அமரர் கோனும் நின்றேத்தும் வேங்கடத்து

ஆடு கூத்தனுக்கு, இன்று

அடிமைத் தொழில் பூண்டாயே.       2.1.9      திருவேங்கடம் திருப்பதி

 

மின்னுமாமுகில்மேவு தண்திருவேங்கடமலை கோயில் மேவிய*

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானைக்*

கன்னிமாமதிள் மங்கையர் கலிகன்றி இன்தமிழாலுரைத்த * இம்

மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.          2.1.10    திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.