Thirumozhi 2-2

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

இரண்டாம் திருமொழி

 

காசை யாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் *

நாசமாக நம்ப வல்ல நம்பி, நம்பெருமான் *

வேயினன்ன தோள்மடவார், வெண்ணெயுண்டான் இவனென்று *

ஏசநின்ற எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.    2.2.1      திருவெவ்வுள்

 

தையலாள் மேல் காதல் செய்த, தானவன் வாளரக்கன் *

பொய்யிலாத பொன்முடிகள், ஒன்பதோடொன்றும் * அன்று

செய்த வெம்போர் தன்னில், அங்கோர் செஞ்சரத்தாலுருள *

எய்த எந்தை எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.         2.2.2      திருவெவ்வுள்

 

முன்னோர் தூது, வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்

மன்னூர் தன்னை, வாளியினால் மாள முனிந்து * அவனே

பின்னோர் தூது, ஆதி மன்னர்க்காகிப் * பெரு நிலத்தார்

இன்னார் தூதனென நின்றான், எவ்வுள் கிடந்தானே.                 2.2.3      திருவெவ்வுள்

 

பந்தணைந்த மெல்விரலாள், பாவை தன் காரணத்தால் *

வெந்திற லேறேழும், வென்ற வேந்தன் விரிபுகழ் சேர் *

நந்தன் மைந்தனாக வாகும், நம்பி நம்பெருமான் *

எந்தை தந்தை தம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.   2.2.4      திருவெவ்வுள்

 

பாலனாகி ஞாலமேழு முண்டு, பண்டு ஆலிலை மேல் *

சால நாளும் பள்ளி கொள்ளும், தாமரைக் கண்ணன் எண்ணில் *

நீலமார் வண்டுண்டு வாழும், நெய்த லந்தண் கழனி *

ஏலநாறும் பைம்புறவில், எவ்வுள் கிடந்தானே.           2.2.5      திருவெவ்வுள்

 

சோத்த நம்பி என்று, தொண்டர் மிண்டித் தொடர்ந்தழைக்கும் *

ஆத்தனம்பி, செங்கணம்பி யாகிலும் தேவர்க்கெல்லாம் *

மூத்த நம்பி முக்கணம்பி என்று, முனிவர் தொழுது

ஏத்தும் * நம்பி எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.    2.2.6      திருவெவ்வுள்

 

திங்கள் அப்பு, வான் எரி காலாகித் திசைமுகனார் *

தங்களப்பன், சாமியப்பன் பாகத்திருந்த வண்டுண் *

தொங்கலப்பு நீள்முடியான், சூழ்கழல் சூட நின்ற *

எங்களப்பன் எம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.           2.2.7      திருவெவ்வுள்

 

முனிவன் மூர்த்தி மூவராகி வேதம் விரித்துரைத்த

புனிதன் * பூவைவண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்கோன் *

தனியன் சேயன் தானொருவனாகிலும், தன்னடியார்க்கு

இனியன் * எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே.        2.2.8      திருவெவ்வுள்

 

பந்திருக்கும் மெல்விரலாள், பாவை பனிமலராள் *

வந்திருக்கும் மார்வன், நீலமேனி மணிவண்ணன் *

அந்தரத்தில் வாழும், வானோர் நாயகனாயமைந்த *

இந்திரற்கும் தம்பெருமான், எவ்வுள் கிடந்தானே.           2.2.9      திருவெவ்வுள்

 

இண்டை கொண்டு தொண்டரேற்ற எவ்வுள் கிடந்தானை *

வண்டு பாடும் பைம்புறவில், மங்கையர் கோன் கலியன் *

கொண்ட சீரால் தண்தமிழ் செய்மாலை, ஈரைந்தும் வல்லார் *

அண்டமாள்வது ஆணை, அன்றேல் ஆள்வர் அமருலகே.  2.2.10    திருவெவ்வுள்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.