Thirumozhi 1-2

பெரிய திருமொழி

முதல் பத்து

இரண்டாம் திருமொழி

வாலி மாவலத் தொருவனதுடல் கெட

வரிசிலை வளைவித்து, அன்று *

ஏலம் நாறு தண்தடம் பொழிலிடம் பெற

இருந்த நலிமயத்துள் *

ஆலிமாமுகி லதிர்தர அருவரை

அகடுற முகடேறிப் *

பீலிமா மயில் நடஞ்செயும் தடஞ்சுனைப்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.1      திருப்பிரிதி

கலங்க மாக்கடல் அரிகுலம் பணிசெய்ய

அருவரை அணை கட்டி *

இலங்கை மாநகர் பொடி செய்த அடிகள் தாம்

இருந்த நலிமயத்து *

விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன

வேழங்கள் துயர்தீரப் *

பிலங்கொள் வாளெயிற்று, அரியவை திரிதரு

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.2      திருப்பிரிதி

துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல்

துளங்கெயிற் றிளங்கொடி திறத்து * ஆயர்

இடிகொள் வெங்குரலின விடை யடர்த்தவன்

இருந்த நலிமயத்துக் *

கடிகொள் வேங்கையின் நறுமல ரமளியின்

மணியறை மிசை வேழம் *

பிடியினோடு வண்டு இசை சொலத் துயில் கொளும்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.3      திருப்பிரிதி

மறங்கொள் ஆளரி யுருவென வெருவர

ஒருவனது அகல் மார்வம்

திறந்து * வானவர் மணிமுடி பணிதர

இருந்த நலிமயத்துள் *

இறங்கி ஏனங்கள் வளை மருப்பிடந்திடக்

கிடந்து அருகெரி வீசும் *

பிறங்கு மாமணி யருவி யொடிழிதரு

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.4      திருப்பிரிதி

கரை செய் மாக்கடல் கிடந்தவன்

கனைகழல் அமரர்கள் தொழுதேத்த *

அரைசெய் மேகலை அலர்மகளவளொடும்

அமர்ந்த நலிமயத்து *

வரைசெய் மாக்களிறு இளவெதிர் வளர்முளை

அளைமிகு தேன் தோய்த்துப் *

பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செயும்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.5      திருப்பிரிதி

பணங்களாயிரமுடைய நல்லரவணைப்

பள்ளி கொள் பரமா ! என்று *

இணங்கி வானவர் மணிமுடி பணிதர

இருந்த நலிமயத்து *

மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற

நிமிர்ந்தவை முகில் பற்றிப் *

பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.6      திருப்பிரிதி

கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய

கறிவளர் கொடி துன்னிப் *

போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய

பூம்பொழி லிமயத்துள் *

ஏர்கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து

இனமல ரெட்டு மிட்டு இமையோர்கள் *

பேர்களாயிரம் பரவி நின்றடி தொழும்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.7      திருப்பிரிதி

இரவு கூர்ந்திருள் பெருகிய வரை முழை

இரும்பசி யதுகூர *

அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய

அருவரை யிமயத்துப் *

பரமன் ஆதி எம் பனிமுகில் வண்ணன் என்று

எண்ணி நின்று இமையோர்கள் *

பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.8      திருப்பிரிதி

ஓதி ஆயிர நாமங்க ளுணர்ந்தவர்க்கு

உறு துயரடையாமல் *

ஏதமின்றி நின்றருளும் நம் பெருந்தகை

இருந்த நலிமயத்துத் *

தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற

தழல் புரை எழில் நோக்கிப் *

பேதை வண்டுகள் எரியென வெருவரு

பிரிதி சென்றடை நெஞ்சே ! 1.2.9      திருப்பிரிதி

கரிய மாமுகிற் படலங்கள்

கிடந்து அவை முழங்கிடக் * களிறென்று

பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு

பிரிதி யெம்பெருமானை *

வரிகொள் வண்டறை பைம்பொழில்

மங்கையர் கலியனதொலி மாலை *

அரிய இன்னிசை பாடும் நல்லடியவர்க்கு

அருவினை அடையாவே. 1.2.10            திருப்பிரிதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.