Thirumozhi 1-4

பெரிய திருமொழி

முதல் பத்து

நான்காம் திருமொழி

ஏனமுனாகி இருநிலமிடந்து

அன்று இணையடி இமையவர் வணங்கத் *

தானவனாகம் தரணியில் புரளத்

தடஞ்சிலை குனித்த என் தலைவன் *

தேனமர் சோலைக் கற்பகம் பயந்த

தெய்வ நல் நறுமலர் கொணர்ந்து

வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1      வதரியாச்சிராமம்

கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து

கண்டு முன் கொடுந் தொழிலுரவோன் *

ஊனுடை யகலத்து, அடுகணை குளிப்ப

உயிர் கவர்ந்துகந்த எம் ஒருவன் *

தேனுடைக் கமலத்தயனொடு தேவர்

சென்று சென்றிறைஞ்சிட, * பெருகு

வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2      வதரியாச்சிராமம்

இலங்கையும் கடலும் அடலரும் துப்பில்

இருநிதிக் கிறைவனும் * அரக்கர்

குலங்களும் கெட, முன் கொடுந் தொழில்

புரிந்த கொற்றவன் * கொழுஞ் சுடர் சுழன்ற

விலங்கலி லுரிஞ்சி மேல் நின்ற விசும்பில்

வெண்துகிற் கொடியென விரிந்து *

வலந்தருமணி நீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.3      வதரியாச்சிராமம்

துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே !

தொழுதெழு தொண்டர்கள் தமக்கு *

பிணியொழித்து, அமரர் பெரு விசும்பருளும்

பேரருளாளன் எம்பெருமான் *

அணிமலர்க் குழலார் அரம்பையர், துகிலும்

ஆரமும் வாரி வந்து * அணிநீர்

மணி கொழித்திழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4      வதரியாச்சிராமம்

பேயிடைக் கிருந்து வந்த மற்றவள் தன்

பெருமுலை சுவைத்திடப் * பெற்ற

தாயிடைக் கிருத்தல் அஞ்சுவனென்று

தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் *

சேய் முகட்டுச்சி அண்டமும் சுமந்த

செம்பொன் செய் விலங்கலி லிலங்கு *

வாய் முகட்டிழிந்த கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5      வதரியாச்சிராமம்

தேரணங் கல்குல் செழுங்கயற் கண்ணி

திறத்து, ஒரு மறத் தொழில் புரிந்து *

பாரணங்கிமில் ஏறேழும் முன்னடர்த்த

பனிமுகில் வண்ணன் எம்பெருமான் *

காரணந் தன்னால் கடும் புனல் கயத்த

கருவரை பிளவெழக் குத்தி *

வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.6      வதரியாச்சிராமம்

வெந்திறல் களிறும் வேலை வாயமுதும்

விண்ணொடு விண்ணவர்க் கரசும் *

இந்திரற் கருளி எமக்கும் ஈந்தருளும்

எந்தை எம்மடிகள் எம்பெருமான் *

அந்தரத்து அமரர் அடியிணை வணங்க

ஆயிர முகத்தினாலருளி *

மந்தரத் திழிந்த கங்கையின் கரை மேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7      வதரியாச்சிராமம்

மான் முனிந்து ஒரு கால் வரிசிலை வளைத்த

மன்னவன், பொன்னிறத்து உரவோன்

ஊன் முனிந்து * அவனதுடல் இரு பிளவா

உகிர் நுதி மடுத்து * அயன் அரனைத்

தான் முனிந்திட்ட, வெந்திறல் சாபம்

தவிர்த்தவன் * தவம் புரிந்துயர்ந்த

மாமுனி கொணர்ந்த கங்கையின் கரை மேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.8      வதரியாச்சிராமம்

கொண்டல் மாருதங்கள், குலவரை தொகுநீர்க்

குரை கடலுலகுடன் அனைத்தும் *

உண்டமா வயிற்றோன் ஒண்சுடரேய்ந்த

உம்பரும் ஊழியுமானான் *

அண்ட மூடறுத்து அன்று அந்தரத் திழிந்து

அங்கு அவனியாள் அலமரப் * பெருகும்

மண்டு மாமணி நீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.9      வதரியாச்சிராமம்

வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்

வதரியாச்சிராமத்துள்ளானை *

கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக்

கலியன் வாயொலி செய்த பனுவல் *

வரஞ் செய்த ஐந்துமைந்தும் வல்லார்கள்

வானவருலகுடன் மருவி *

இருங்கடலுலகம் ஆண்டு வெண்குடைக்கீழ்

இமையவராகுவர் தாமே. 1.4.10              வதரியாச்சிராமம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.