Thiruvoymozhi 9-9

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

ஒன்பதாம் திருவாய்மொழி

மல்லிகை கமழ் தென்ற லீருமாலோ !

வண்குறிஞ்சி யிசை தவறுமாலோ ! *

செல் கதிர் மாலையும் மயக்குமாலோ !

செக்கர் நல் மேகங்கள் சிதைக்குமாலோ ! *

அல்லியந் தாமரைக் கண்ணனெம்மான்

ஆயர்களேறு அரியேறு எம்மாயோன் ! *

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு

புகலிடம் அறிகிலம் தமியமாலோ !        9.9.1

புகலிட மறிகிலம் தமியமாலோ !

புலம்புறு மணி தென்ற லாம்பலாலோ ! *

பகலடு மாலை வண் சாந்தமாலோ !

பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ ! *

அகலிடம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்து

எங்கு மளிக்கின்ற ஆயன் மாயோன் *

இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்

இனியிருந்து என்னுயிர் காக்குமாறென் ?              9.9.2

இனியிருந்து என்னுயிர் காக்குமாறென் ?

இணை முலை நமுக நுண்ணிடை நுடங்கத் *

துனியிருங் கலவி செய்தாகம் தோய்ந்து

துறந்தெம்மை இட்டகல் கண்ணன் கள்வன் *

தனியிளஞ் சிங்கம் எம்மாயன் வாரான்

தாமரைக் கண்ணும் செவ்வாயும் * நீலப்

பனியிருங் குழல்களும் நான்கு தோளும்

பாவியேன் மனத்தே நின்றீருமாலோ !    9.9.3

பாவியேன் மனத்தே நின்றீருமாலோ !

வாடை தண் வாடை வெவ்வாடையாலோ ! *

மேவு தண் மதியம் வெம்மதியமாலோ !

மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாலோ ! *

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு

துதைந்த எம் பெண்மை யம்பூவிதாலோ ! *

ஆவியின் பரமல்ல வகைகளாலோ !

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ !       9.9.4

யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ !

ஆபுகு மாலையு மாகின்றாலோ ! *

யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ !

அவனுடைத் தீங்குழல் ஈருமாலோ ! *

யாமுடைத் துணையென்னும் தோழிமாரும்

எம்மின் முன் அவனுக்கு மாய்வராலோ ! *

யாமுடை ஆருயிர் காக்குமாறென் ?

அவனுடை யருள் பெறும் போதரிதே.    9.9.5

அவனுடை யருள் பெறும் போதரிதால்

அவ்வருளல்லன அருளுமல்ல *

அவனருள் பெறுமளவு ஆவி நில்லாது

அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் *

சிவனொடு பிரமன் வண் திருமடந்தை

சேர் திருவாகம் எம்மாவி ஈரும் *

எவம்(ன்)இனிப் புகுமிடம் ? எவம் (ன்) செய்கேனோ ?

ஆருக்கு என் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !           9.9.6

ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள் !

ஆருயிரளவன்று இக்கூர் தண்வாடை *

காரொக்கும் மேனி நங்கண்ணன் கள்வம்

கவர்ந்த அத் தனி நெஞ்சம் அவன் கணஃதே *

சீருற்ற அகிற்புகை யாழ் நரம்பு

பஞ்சமம் தண் பசுஞ் சாந்தணைந்து *

போருற்ற வாடை தண் மல்லிகைப்பூப்

புது மணம் முகந்து கொண்டெறியுமாலோ !     9.9.7

புது மணம் முகந்து கொண்டெறியுமாலோ !

பொங்கிள வாடை புன் செக்கராலோ ! *

அது மணந்தகன்ற நங்கண்ணன் கள்வம்

கண்ணனிற் கொடிது இனியதனிலும்பர் *

மது மணமல்லிகை மந்தக்கோவை

வண் பசுஞ்சாந்தினில் பஞ்சமம் வைத்து *

அது மணந்தின்னரு ளாய்ச்சியர்க்கே

ஊதும் அத்தீங் குழற்கே உய்யேன் நான்.             9.9.8

ஊதுமத் தீங்குழற்கே உய்யேன் நான்

அது மொழிந்திடை யிடைத் தன் செய்கோலத் *

தூதுசெய் கண்கள் கொண்டு ஒன்று பேசித்

தூமொழி யிசைகள் கொண்டு ஒன்று நோக்கிப் *

பேதுறு முகஞ் செய்து நொந்து நொந்து

பேதை நெஞ்சறவறப் பாடும் பாட்டை *

யாதுமொன் றறிகிலம் அம்ம ! அம்ம !

மாலையும் வந்தது மாயன் வாரான்.      9.9.9

மாலையும் வந்தது மாயன் வாரான்

மாமணி புலம்ப வல்லேறணைந்த *

கோல நன்னாகுகள் உகளுமாலோ !

கொடியன குழல்களும் குழறுமாலோ ! *

வாலொளி வளர் முல்லை கருமுகைகள்

மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ ! *

வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ !

என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?       9.9.10

அவனை விட்டகன்று உயிராற்றகில்லா

அணியிழை யாய்ச்சியர் மாலைப் பூசல் *

அவனை விட்டகல்வதற்கே இரங்கி

அணி குருகூர்ச் சடகோபன் மாறன் *

அவனியுண் டுமிழ்ந்தவன் மேலுரைத்த

ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு *

அவனியுளலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்!

அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே.      9.9.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.