Amalanadipirran

திருப்பாணாழ்வார் அருளிச்செய்த

அமலனாதிபிரான்

தனியன்கள்

(பெரியநம்பிகள் அருளிச்செய்தது)

ஆபாதசூடமநுபூயஹரிம்ஶயாநம்

மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா

அத்ருஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம்

யோநிஶ்சிகாயமநவைமுநிவாஹநந்தம்.

(திருமலைநம்பிகள் அருளிச்செய்தது)

காட்டவேகண்டபாதகமலம்நல்லாடையுந்தி*

தேட்டரும்உதரபந்தம் திருமார்வுகண்டம்செவ்வாய்

வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து *

பாட்டினாற்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே.

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட் படுத்த

விமலன் * விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் *

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத்தம்மான் * திருக்

கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. 1   1          திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி

உவந்த வுள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற *

நிவந்த நீள்முடியன் * அன்று நேர்ந்த நிசாசரரைக் *

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழிலரங்கத் தம்மான் *

அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாமென சிந்தனையே. 2    2            திருவரங்கம்

மந்திபாய் வடவேங்கட மாமலை * வானவர்கள்

சந்தி செய்ய நின்றான் அரங்கத்தரவி னணையான் *

அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *

உந்தி மேலதன்றோ அடியேனுள்ளத் தின்னுயிரே. 3         3          திருவரங்கம்,

திருவேங்கடம் திருப்பதி

சதுரமா மதிள்சூழ் இலங்கைக் கிறைவன் தலை பத்து

உதிர வோட்டி * ஓர் வெங்கணை யுய்த்தவன் ஓத வண்ணன் *

மதுர மா வண்டு பாட மாமயிலா டரங்கத்தம்மான் * திருவயிற்று

உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்று உலாகின்றதே. 4     4          திருவரங்கம்

பாரமாய பழ வினை பற்றறுத்து * என்னைத் தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான் *

கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான் * திரு

வார மார்பதன்றோ அடியேனை ஆட் கொண்டதே. 5       5          திருவரங்கம்

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் * அஞ்சிறைய

வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன் *

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை *

முற்றும் உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே. 6      6            திருவரங்கம்

கையினார் சுரிசங்கன லாழியர் * நீள்வரை போல்

மெய்யனார் * துளப விரையார் கமழ் நீண்முடி எம்

ஐயனார் * அணியரங்கனார் அரவினணை மிசை மேய

மாயனார் * செய்யவாய் ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. 7          7            திருவரங்கம்

பரியனாகி வந்த அவுணனுடல் கீண்ட * அமரர்க்கு

அரிய ஆதிப்பிரான் அரங்கத் தமலன் முகத்துக் *

கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி * நீண்ட அப்

பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே. 8       8          திருவரங்கம்

ஆல மா மரத்தினிலை மேல் ஒரு பாலகனாய் *

ஞாலமேழும் உண்டான் அரங்கத் தரவி னணையான் *

கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும், முடிவில்லதோரெழில் *

நீல மேனி ஐயோ ! நிறை கொண்டது என் நெஞ்சினையே. 9 9          திருவரங்கம்

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ

யுண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை *

அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்

கண்ட கண்கள் * மற்றொன்றினைக் காணாவே. 10           10        திருவரங்கம்

அமலனாதிபிரான் முற்றும்

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.