Thiruvoymozhi 1-3

திருவாய்மொழி

முதல் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக்கரிய

வித்தகன் * மலர் மகள் விரும்பும் நம் அரும் பெறலடிகள் *

மத்துறு கடை வெண்ணெய் களவினில், உரவிடை யாப்புண்டு *

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?     1.3.1

 

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய் *

ஒளி வரு முழு நலம் முதலில கேடில * வீடாம்

தெளி தரு நிலைமையது ஒழிவிலன், முழுவதும் இறையோன் *

அளிவரும் அருளினோடு அகத்தனன், புறத்தனன் அமைந்தே.       1.3.2

 

அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்த

அமைவுடை * முதல் கெடல் ஒடிவிடை யறநிலமதுவாம் *

அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் * தானாம்

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே ?         1.3.3

 

யாரும், ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் *

யாரும், ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் *

பேரும் ஓராயிரம், பிறபல வுடைய எம்பெருமான் *

பேரும் ஓருருவமும், உளதில்லை இலதில்லை பிணக்கே.            1.3.4

 

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த *

கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன் *

வணக்குடைத் தவநெறி வழி நின்று புறநெறி களைகட்டு *

உணக்குமின், பசையற அவனுடையுணர்வு கொண்டுணர்ந்தே.      1.3.5

 

உணர்ந் துணர்ந்து இழிந்தகன்று

உயர்ந்துரு வியந்த இந்நிலைமை *

உணர்ந் துணர்ந் துணரிலும்

இறை நிலை உணர்வரிது உயிர்காள் ! *

உணர்ந் துணர்ந் துரைத்து உரைத்து

அரி அயன் அரன் என்னும் இவரை *

உணர்ந் துணர்ந் துரைத்து உரைத்து

இறைஞ்சுமின் மனப் பட்டதொன்றே.         1.3.6

 

ஒன்றெனப் பலவென, அறிவரும் வடிவினுள் நின்ற *

நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவரை *

ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இருபசை யறுத்து *

நன்றென நலஞ் செய்வது அவனிடை நம்முடை நாளே.    1.3.7

 

நாளும் நின்றடு நம பழமை அங்கொடு வினை யுடனே

மாளும் * ஓர் குறைவில்லை மனனகம் மலமறக் கழுவி *

நாளும் நம் திருவுடை யடிகள் தம் நலங்கழல் வணங்கி *

மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.          1.3.8

 

வலத்தனன், திரிபுர மெரித்தவன், இடம் பெறத் துந்தித்

தலத்து * எழு திசைமுகன் படைத்த நல்லுலகமும், தானும்

புலப்படப் * பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே

சொலப்புகில் * இவை பின்னும் வயிற்றுள இவை அவன் துயக்கே.    1.3.9

 

துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும் *

மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் *

புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்த நல்லடிப் போது *

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.            1.3.10

 

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை *

அமர்பொழில் வளங்குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள் *

அமர்சுவை யாயிரத்து அவற்றினுள், இவை பத்தும் வல்லார் *

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி யஞ்சிறையே.          1.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.